வியாழன், 28 பிப்ரவரி, 2019

பேர்ண் மாநில இலங்கைத் தமிழ் பெண் நகரசபை தேர்தலில் வெற்றி

சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான “எஸ்.பி” கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிட்டு நேரடியாக வெற்றிவாகை சூட்டியுள்ளார். 2014 ஆண்டு 
நடந்த தேர்தலில் 2003 ஓட்டுகள் பெற்றார், நேற்று நடந்த தேர்தலில், 2916 ஓட்டுகள் பெற்று மிக வெற்றிவாகை சூடினார். சுவிஸ் தூண் நகரசபையில் முதன்முதலாக வெற்றியீட்டிய முதல் தமிழ்ப்பெண் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு சுவிஸில் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். யாழ். புங்குடுதீவில் பிறந்து சிறுவயதிலேயே சுவிஸ் வந்து இங்கு படித்து பட்டம் பெற்று,$
 தற்போது சுவிஸின் “எஸ்.பி” எனும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியில் தூண் மாநில நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 6 பிப்ரவரி, 2019

சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை விரும்பும் சுற்றுலாப்பயணிகள்

சுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.
2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் 
கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்
வமற்ற செய்தி கூறுகிறது.
மொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.
சுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 2 பிப்ரவரி, 2019

தமிழர்களின் கொண்டாட்டங்களுக்கு சுவிசில் வர உள்ள நெருக்கடி

.
சுவிற்சர்லாந்தில் கடந்த காலங்களில் பல மாநிலங் noகளில் வாடகைக்கு மண்டபம் எடுத்து கொண்டாட்டங்கள் செய்வது வழமையாக காணப்பட்டது.
எனினும் இவ்வாறு கொண்டாட்டங்களுக்காக மண்டபங்களை வாடகைக்கு எடுப்பவர்கள் சரியான வகையில் அதனை கையளிக்க தவறுவதால் மண்டப உரிமையார்கள் இலங்கை தமிழர்களின் நிகழ்வுகளுக்காக மண்டபம் கொடுப்பதில்லை 
என முடிவெடுத்துள்ளனர்.
சூரிச், வேர்ன், வாசல், லுட்சர்ன், செங்காலன், துர்கவ், ஜெனீவா, லவ்சார் மற்றும் இன்னும் பல பிற மாநிலங்களும் உள்ள மண்டப உரிமையாளர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
காரணம் என்னவெனில் நிகழ்விற்காக பெற்ப்படும் மண்டபங்கள் சரியான வகையில் மீள கையளிக்கப்படாமையே ஆகும்.
அத்துடன் மண்டபம் பெறுபவர்கள் மது போதையில் மண்டப மேற்பார்வையாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதுடம் இந்த தீர்மானம் எடுக்கப்படுவதற்கான ஒரு காரணம் என தெரியவருகிறது. தற்போது ஒரு சில மண்டபங்களே வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இவையும் எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் திரைப்படங்களை காட்சிப்படுத்துவதற்கு கூட பல மண்டபங்கள் தடை விதித்திருப்பமை குறிப்பிடத்தக்கது.
சில வேளை இப்படி எழுதுவது சுவிற்சர்லாந்தில் உள்ள இலங்கையர்களிற்கு பிடிக்காமல் இருக்கலாம் இது எல்லாம் ஏன் செய்தியாக்க வேண்டும் என என்ற கேள்விகளும் வரலாம் அப்படியான சந்தேகத்தை தவிர்ப்பதற்காக விபரங்களுடன் விரைவில்
 ஆதாரம் வெளியிடப்படும்
உலகில் பழக்க வழக்கம் மற்றும் கலாச்சாரங்களில் உயர்வாக பார்க்கும் தமிழ் இனம் இன்று இந்த விடயங்களில் மதிப்பும் மரியாதையும் இழந்து வருவது உணர்வுள்ள தமிழனுக்கு மரியாதைக் குறைவாக உள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள் அடுத்த தலைமுறையையும் சரியான பாதையில் இன்றுள்ள பெரியவர்கள் வழிநடத்த தவறியுள்ளனர் என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.