சுகாதாரச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகாதாரச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 டிசம்பர், 2018

சுவிட்சர்லாந்தின் வெளியான பில்லியனர்கள் பட்டியல்

சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியலில் 51 பில்லியன் பிராங்குகளுடன் முதலிடத்தில் Family Kamprad உள்ளது.
சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 300 பேர் கொண்ட இந்த பட்டியலில் முதலிடத்தை IKEA குழுமத்தின் Kamprad சகோதரர்கள் தக்கவைத்துள்ளனர்.
கடந்த ஆண்டை விடவும் இந்த 300 பேரின் சொத்துமதிப்பு அதிகரித்திருந்தாலும் எதிர்பார்த்தபடி இல்லை என்றே கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக இந்த 300 பில்லியனர்களின் சொத்துமதிப்பு 675 பில்லியன் பிராங்குகள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் 300 பேரும் தனித்தனியாக ஆண்டுக்கு சுமார் 2,251 மில்லியன் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டை விடவும் இந்த முறை சுவிஸ் செல்வந்தர் ஒருவர் சராசரியாக 1.7 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு வருவாயை அதிகரித்திருந்தாலும் அது குறைவாகவே கருதப்படுகிறது.
இந்த 300 பில்லியனர்களும் கூட்டாக தங்கள் சொத்துக்களை சுவிஸ் குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு எடுப்பார்கள் எனில், தனி மனிதர் ஒருவருக்கு சுமார் 79,400 பிராங்குகள் வரை கி8டைக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் மொத்த உள்நாட்டுஉற்பத்தியை விடவும் இந்த 300 செல்வந்தர்களின் சொத்துமதிப்பு 3 மடங்கு வேகத்தில் வளர்ச்சியை எட்டுவதாக கூறப்படுகிறது.
சுவிஸின் டாப் 10 பில்லியனர்களின் மொத்த சொத்துமதிப்பு 203 பில்லியன் பிராங்குகள் எனவும், இந்த ஆண்டு மட்டும் இந்த 10 பேரும் 2 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 24 ஜனவரி, 2018

சுவிசில் நாட்டில் உலகின் புதுமையான மின் நிலையம் !

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிலையத்தை, ஐஸ்லாந்து நாட்டில்
 நிறுவியுள்ளது.
இந்த மின் நிறுவனம், இதுவரை இல்லாத புதுமையான வழியில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. வழக்கமான அனல்மின் நிலையங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உமிழும்.
ஆனால், இந்த மின் நிலையம் அதற்கு எதிர்மறையாக செயல்பட்டு, மின்னாற்றலை உற்பத்தி செய்கிறது.
இந்த மின்நிலையம், நிலத்தடியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் உள்ள கருங்கல் பாறைகளில் இருந்து கார்பன் -டை-ஆக்ஸைடை உறிஞ்சி, குறைந்த வெப்பநிலைக்கு அதனை உட்படுத்தி மின்சாரமாக
 மாற்றுகிறது.
இந்த தொழில்நுட்பம் ‘கார்பிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை சுவிஸ் விஞ்ஞானிகள் குழு, 2 ஆண்டுகளின் முயற்சியின் பலனாக
 கண்டுபிடித்தது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘பூமி முழுவதும் இந்த பாறை அடுக்கு பரவலாக காணப்படுகிறது. எனவே, மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல், எந்த இடத்திலும் இந்த தொழில்நுட்பத்தில் 
மின் உற்பத்தி செய்ய முடியும்’ என தெரிவித்துள்ளனர்.எனினும், பூமிக்கு அடியில் உள்ள கார்பனை உறிஞ்சுவதன் மூலமாக ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் 
வெளியாகவில்லை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 1 ஜூன், 2014

உலக விஞ்ஞானிகளுடன் கலக்கிய சுவிஸ்

உலக விஞ்ஞானிகளுடன் இணைந்த சுவிஸ் ஆய்வாளர்கள் கோரோனா என்ற ஒரு வகை கிருமிக்கான புதிய தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.
கோரோனா என்ற கிருமியினால் ஏற்படும் சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகிய நோய்கள் மனிதனின் மேல் மற்றும் கீழ் சுவாச தடங்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதனால் கடந்த 2002ம் ஆண்டு உலக முழுவதும் இந்த நோய் தாக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சவுதி அரேபியாவில் சுமார் 636 பேர் பாதிக்கப்பட்டதுடன், 193 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இந்த நோயை போக்குவதற்கான மருந்தை சுவீடன் நாட்டை சார்ந்த எட்வர்ட் என்ற விஞ்ஞானியும் சுவிசை சேர்ந்த வால்கோர் என்ற ஆய்வாளரும் தங்களது ஆராய்ச்சி குழுவினருடன் இணைந்து ஆய்வில் செயல்பட்டு, k22 என்ற மருத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த மருந்து கோரோனா வைரஸ் கிருமியை தாக்கி கொல்லும் வல்லமை படைத்தது என அவர்கள் கூறியுள்ளனர்.
 

வியாழன், 21 நவம்பர், 2013

மலேரியாவை ஒழிப்போம்: திரைப்பட எழுத்தாளர் ரிச்சர்ட் அறைகூவல்



உலகமக்கள் அனைவரும் மலேரியாவை ஒழிக்க பாடுபட வேண்டும் என திரைப்பட கதாசிரியர் ரிச்சர்ட் காட்டிஸ் ஜெனிவாவில் நேற்று அறைகூவல் விடுத்துள்ளார்.
ரிச்சர்ட் கடந்த 10 ஆண்டுகளாக மலேரிய ஒழிப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரிச்சர்ட் இதுகுறித்து கூறுகையில், இதற்கான எளிய வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன. அவற்றை முறைப்படி பின்பற்றுவது மலேரியாவை ஒழிக்க உதவும்.
மேலும் வருடத்தில் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மலேரியாவினால் கொல்லப்படுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலான மக்கள் ஆப்பிரிக்க கண்ட நாடுகளிலேயே உயரிழந்து வருகின்றனர் என்றும் மலேரிய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஒரு ஆப்பிரிக்க குழந்தையின் மரணம் கொடூரமானது, கற்பனை செய்தும் பார்க்க முடியாதது எனவும் கூறியுள்ளார்.

பஞ்சத்தில் வாடி வரும் எத்தியோப்பியாவில் ரிச்சர்ட் 1985 ஆம் ஆண்டு நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டார்.

1988ம் ஆண்டு ஐ.நா மற்றும் உஸ்பொகிஸ்தானுடன் இணைந்து மலேரியா நோயை பரப்பும் கொசுக்களை அழிக்கும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Blogger இயக்குவது.