வியாழன், 21 நவம்பர், 2013

மலேரியாவை ஒழிப்போம்: திரைப்பட எழுத்தாளர் ரிச்சர்ட் அறைகூவல்



உலகமக்கள் அனைவரும் மலேரியாவை ஒழிக்க பாடுபட வேண்டும் என திரைப்பட கதாசிரியர் ரிச்சர்ட் காட்டிஸ் ஜெனிவாவில் நேற்று அறைகூவல் விடுத்துள்ளார்.
ரிச்சர்ட் கடந்த 10 ஆண்டுகளாக மலேரிய ஒழிப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரிச்சர்ட் இதுகுறித்து கூறுகையில், இதற்கான எளிய வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன. அவற்றை முறைப்படி பின்பற்றுவது மலேரியாவை ஒழிக்க உதவும்.
மேலும் வருடத்தில் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மலேரியாவினால் கொல்லப்படுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலான மக்கள் ஆப்பிரிக்க கண்ட நாடுகளிலேயே உயரிழந்து வருகின்றனர் என்றும் மலேரிய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஒரு ஆப்பிரிக்க குழந்தையின் மரணம் கொடூரமானது, கற்பனை செய்தும் பார்க்க முடியாதது எனவும் கூறியுள்ளார்.

பஞ்சத்தில் வாடி வரும் எத்தியோப்பியாவில் ரிச்சர்ட் 1985 ஆம் ஆண்டு நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டார்.

1988ம் ஆண்டு ஐ.நா மற்றும் உஸ்பொகிஸ்தானுடன் இணைந்து மலேரியா நோயை பரப்பும் கொசுக்களை அழிக்கும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.