சனி, 23 நவம்பர், 2013

கொலைக்குற்றத்தை மறைக்கும் ஜெனிவா பேராசிரியை

அமெரிக்காவில் நடந்த கொலை தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டை ஜெனிவா பெண் பேராசிரியர் மறுத்துள்ளார்.

கலிபோர்னியாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் வெஸ்டர் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் பெண் ஒருவர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மனோத்துவ உளவியல் துறை பேராசிரியரான நார்மா பெட்ரீஷியா எஸ்பார்கா (39) என்பவர் கலிப்போர்னியாவில் 1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி ராமிரேஸ்(24) என்பவரை திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

எஸ்பார்கா இந்த சம்பவம் குறித்து வேன் என்ற நபரிடம் விபரித்துள்ளார். இதனையடுத்து வேன் மற்றும் இரண்டு பேர் இணைந்து ராமிரேஸை கொலை செய்துள்ளனர் என நீதிமன்றம் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க பொலிசாரினால் 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் தற்பொழுது மூன்று லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவரின் கணவரான ஜோர்ஜ் என்பவர் நரம்பியல் நிபுணராவார். அவரே எஸ்பார்காவின் 4 வயது குழந்தை வளர்த்து வருகிறார். தன் மனைவி குற்றமற்றவர் என்று ஜோர்ஜ் வாதிட்டு வருகிறார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.