வெள்ளி, 29 நவம்பர், 2013

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! களைக்கட்டுகிறது சுவிஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து, சுவிஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டியையை முன்னிட்டு, மக்களை கவரும் விதமாக கடைகளில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வண்ணவண்ண விளக்குகளால் கடைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சூரிஜ்(Zurich) மற்றும் லுகெர்னி(Lucerne) நகரங்களில் ரயில் நிலையம் அருகில் உள்ள கடைகள் Apps ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஜெனீவாவின் ஏரிக்கரையில் அமைந்துள்ள மான்ட்ரியக்ஸ்(Montreux) நகர கடைகளில் பெரிய மர அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் இளைப்பாருவதற்காக பிட்ஸா மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நிர்வாக சங்கத்தின் தலைவர் யுவஸ்கார்னரோ கூறுகையில், இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது ஜாஸ் திருவிழா.
பல்வேறு நாடுகளிலிருந்து வணிகர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்கின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தால், இந்நகரம் முழுவதுமே மக்கள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆண்டுதோறும் புதுவிதமான மாற்றங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தாண்டு 250க்கும் மேலான வணிகர்கள் கடை வைத்துள்ளனர், இதனால் சுவிசின் மற்ற நகரங்களுக்கும், மான்ட்ரியக்ஸ் நகரத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.