செவ்வாய், 5 நவம்பர், 2013

மில்லியன் கணக்கான பரிசினை பெற தாமதன் ஏன்?


சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய லொத்தரி பரிசாக யூரோ மில்லியன் லொத்தரி ஜாக்பாட்(Euro Million Lottery Jackpot) கருதப்படுகிறது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 114 மில்லியன் பிராங்குகள் அதாவது 125 மில்லியன் டொலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிசினை வென்ற நபர் இதுவரையிலும் பணத்தை பெற்றுக்கொள்ள வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் பேச்சாளர் கூறுகையில், பரிசுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரத்திற்குள் 80 சதவிகித மக்கள் பெற்றுச் செல்வர்.

ஆனால் ஜாக்பாட்டை வென்ற நபர் இன்னும் வரவில்லை, ஆறு மாதங்கள் கழிந்த பிறகு பரிசு கிடைக்கப்பெறாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் லி மான்டின் என்பவர் கூறுகையில், பரிசு

பெற்ற நபர் நிதிநிலைமையின் காரணமாக பெறாமல் இருக்கலாம்.
அதாவது 2013ம் ஆண்டு பரிசினை பெற்றால் அதிகளவு வரி செலுத்த நேரிடும்.
இதுவே 2014ம் ஆண்டு என்ற போது குறைந்தளவு வரி செலுத்தினாலே போதுமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.