வியாழன், 21 நவம்பர், 2013

அழைப்பிதழோடு விபச்சாரத்தில் அசத்தும் அதிகாரிகள்



சூரிச் பகுதியில் விபச்சாரத்திற்கு துணை போன 11 பொலிசார்கள் குறித்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் இயங்கி வரும் சில்லி இரவு நேர விடுதியில் 11 பொலிசார்கள் அங்கு நடக்கும் விபச்சாரத்திற்கு உதவி செய்துள்ளனர்.

அதாவது அங்கு நடைபெறும் அக்டோபர்பிஸ்ட் விருந்தில் இவர்களுக்கு வரவேற்பு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளன.
இதில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் அங்கு வழங்கப்படும் வகை வகையான உணவுகள் மற்றும் பெண்களை லஞ்சமாக பெற்றுக்கொள்கின்றனர்.

மேலும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் வாடிக்கையாளர்கள் அதிமாக செலவு செய்து அழைப்பிதழை பெற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த அழைப்பிதழ் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இவர்கள் தினமும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளலாம். இந்நிலையில் இந்த உண்மையான வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் காவல்துறை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதியின் உரிமையாளர் எதுவும் கூற மறுத்துவிட்ட நிலையில் பொலிசாருக்கு 50 பிராங்குகள் அபராதம் விதித்து தலைமை அதிகாரி உத்தவிட்டுள்ளார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.