வியாழன், 15 மே, 2014

கரடியால் சிக்கல்களை அனுபவிக்கும் பூங்கா

கரடியால் சிக்கல்களை அனுபவிக்கும் பூங்கா
சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி தனது இரண்டு குட்டிகளையும் கொன்றதுக்கு கண்டனம் தெரிவித்து ரயில் ஓட்டுனர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள உயிரியல் பூங்காவில் மிஷா, மாஷி கரடிகளுக்கு கடந்த ஜனவரி 15ம் திகதி இரண்டு ஆண் கரடி குட்டிகள் பிறந்தது.
இதில் தந்தை கரடியான மிஷா கடந்த 3ம் திகதியில் தனது குட்டியை தூக்கி போட்டு விளையாடி கொண்டிருக்கையில் எதிர்பாரதவிதமாக அக்குட்டி கிழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்நிலையில் மற்றொரு கரடி குட்டியையும், தந்தை கரடி அதேபோல் விளையாடி கொன்றுள்ளது.
இதனால் பூங்காவின் மேலாளர்கள் வனவிலங்கு துறையினர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், அந்நாட்டில் வசிக்கும் கேர்ட் நோன்லிட்ஸ் என்பவர் அந்த பூங்காவின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவர், நாய் வளர்ப்பை தனது பொழுதுபோக்காக கொண்டவர், இதுகுறித்து அவர் கூறுகையில், கரடிகள், இவ்வாறு தனது குட்டிகளை கொல்வது இயல்பாக நடப்பது, ஆனால் பூங்காவினர் தான் இதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.