திங்கள், 19 மே, 2014

பரபரப்பை ஏற்படுத்திய குட்டி கரடி

சுவிசர்லாந்தில் கரடி குட்டி ஒன்று 9 செம்மறி ஆடுகளை வேட்டையாடி கொன்றுள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் கிராபுடன் மாகாணத்தில் உள்ள m-25 என்ற இனத்தை சார்ந்த கரடி குட்டி ஒன்று ”லொவர் எங்கடென்” என்ற பகுதியில் திரிந்து கொண்டிருந்த 9 ஆடுகளை கிழித்து கொன்றுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பயத்தில் ஆழ்ந்ததுடன், இந்த கரடி குட்டியை கொன்றுவிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த WWF சுற்றுசூழல் குழு இந்த வகை கரடிகள் அழிந்து வருவதால் அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளது.
மேலும் வனவிலங்கு துறை அலுவலகர்களால் கொல்லப்பட்ட m-13 மற்றும் JJ3 கரடிகளை இந்த கரடிகளையும் கொல்லும் அபாயம் மீண்டும் ஏற்படகூடாது என இந்த குழு எச்சரித்துள்ளது





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.