சனி, 24 மே, 2014

தீவிரம் தவளைகளை காக்கும் முயற்சியில் சுவிஸ்

சுவிசில் தவளைகளை காப்பாற்ற சுமார் 260,00 பிராங்குகள் செலவிட அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுவிசில் சுரங்கப்பாதை கட்டுவதால் அங்கு பாதிக்கபடவிருந்த 100 தவளைகளை வேறு இடம் மாற்ற போவதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிஸின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலோதுர்ன் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுவதால், அங்குள்ள அரிய வகை தவளைகளை 260,000 பிராங்குகள் செலவில் இடம் பெயர்க்க முடிவு செய்துள்ளது.
மத்திய சாலைகள் அமைச்சகம் 500 மில்லியன் பிராங்குகள் செலவில் பெல்சென் சுரங்கப்பாதயை புதுபிக்க உள்ளது.
இதனால் அந்த சுரங்கபாதையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தவளைகளை இடம் பெயர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதை செயல்படுத்த இந்த மாதத்திலிருந்தே இயற்கை பாதுகாப்பு குழுவினர் இரவுகளில் செயல்பட்டு, தவளைகளை பிடித்து இடம் பெயர்த்து வருகின்றனர்.
5.5 செ.மீ நீளம் வளரும் மிட்வைஃப் டோட்ஸ் என அழைக்கப்படும் இந்த தவளைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதால், இதனை பாதுகாப்பதில் அரசு திவீரமாக இறங்கி இதுவரை 10 தவளைகள் பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தவளைகள் கடந்த 2013ம் ஆண்டில் சுவிசின் சிறந்த விலங்காக அறிவிக்கபட்டது குறிப்பிடதக்கது.
 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.