செவ்வாய், 6 மே, 2014

கணவனை காப்பாற்ற நதியில் மூழ்கிய மனைவி

சுவிட்சர்லாந்தில் கணவனை காப்பாற்றுவதற்கு நதியில் மூழ்கி மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன், மனைவி இரண்டு பேரும், தங்களது இரண்டு வளர்ப்பு நாய்களை கூட்டிக் கொண்டு, LOMBOCH RIVER என்ற ஆற்றின் கரை வழியே கரை ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கையில், இரண்டு நாய்களில் ஒன்று துள்ளிக்குதித்து ஓடி, ஆற்றில் விழுந்து விட்டது.
 
அந்த நாயைக் காப்பாற்ற, கணவனும் ஆற்றில் குதித்துள்ளார், இதனைக் கண்ட மனைவியும், தனது வளர்ப்பு நாயையும், கணவனையும் காப்பாற்றும் பொருட்டு ஆற்றில் குதித்துள்ளார்.
இந்த ஆறு 11கி.மீ நீளம் கொண்டது, மேலும் LAKE THUN என்ற ஏரியுடன் சென்று கலக்கும் மிகப் பெரிய நீளமான ஆறு ஆகும், ஆகவே இந்த 55 வயதுப் பெண் ஆற்றில் குதித்தவுடன், வெள்ளப் பெருக்கினால் அடித்துச் செல்லப்படுகையில், பயங்கர காயங்களுக்குள்ளானார்.
 
அவரது கணவன் தனது நாயைக் காப்பாற்றியவுடன், தனது மனைவியை ஆற்றுக்குள் சுயநினைவின்றி மீட்டெடுத்து, போது மக்களின் உதவியுடன் முதலுதவிகள் செய்து காப்பாற்ற முயற்சிகள் செய்துள்ளார்.
மேலும் அவசரஊர்தி மூலம் மருத்துவமனை கொண்டு செல்லும்வழியில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.