புதன், 17 ஆகஸ்ட், 2016

ரூபாய்.2.34 கோடி மதிப்புள்ள நகைகளை திருடிய பெண்!

  சுவிட்சர்லாந்து நாட்டில்  ரூபாய் 2.34 கோடி  மதிப்புள்ள நகைகளை திருடிய வேலைக்கார பெண்ணிற்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவிஸில் உள்ள லூசேர்ன் மாகாணத்தில் பெண்களை வீடு வீடாக அனுப்பி சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் Obwalden மாகாணத்தை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
நிறுவனம் அனுப்பும் வீடுகளுக்கு சென்று சுத்தம் செய்யும் பணியை இவர் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 2011ம் ஆண்டு முதல் மார்ச் 2012ம் ஆண்டு வரை இந்த வேலைக்காரப் பெண் 5 வீடுகளில் திருடியுள்ளார்.
இவ்வாறு இவர் திருடிய நகைகளின் ஒட்டுமொத்த மதிப்பு 1,56,000 பிராங்க்(2,34,41,163 இலங்கை ரூபாய்) ஆகும்.
பெயர் வெளியிடப்படாத இப்பெண் மீது திருட்டு குற்றம் அம்பலமானதை தொடர்ந்து அவர் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பெண் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, 5 வீடுகளில் நகைகளை திருடியது நிரூபனம் ஆனதை தொடர்ந்து பெண்ணிற்கு நீதிமன்றம் 20 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இவ்வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு ஆன 8,500 பிராங்க் செலவினத்தையும் அப்பெண் செலுத்த வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளா
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.