வெள்ளி, 13 நவம்பர், 2015

துணை தலைவி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து சுவிட்சர்லாந்தின் மாற்று கீறின் கட்சியின் துணை தலைவி அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
Zug பிராந்திய நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினராக தொடர்ந்தும் இருக்க எண்ணியுள்ள Jolanda Spiess-Hegglin என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த நிலையில் தாம் சார்ந்த கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ள அவர், ஒரு சுதந்திரமான அரசியலை தொடர விரும்புவதாகவும் Jolanda Spiess-Hegglin 
கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு திசம்பரில் Zug பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக விருந்து ஒன்று நடைபெற்றுள்ளது.
அதில் கலந்து கொண்ட சுவிஸ் மக்கள் கட்சியின் Zug பிராந்திய முன்னாள் தலைவர் Markus Hurlimann போதை மருந்தை கலந்து தந்து Jolanda ஐ பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக
 கூறப்படுகிறது.
இதுகுறித்து நடத்தப்பட்ட அனைத்து மருத்துவ சோதனைகளிலும் இருவரும் பாலியல் உறவு கொண்டதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே Jolanda Spiess-Hegglin மற்றும் Markus Hurlimann ஆகியோர் உடனடியாக Zug பிராந்திய நாடாளுமன்றத்தில் இருந்து பதவி விலக வேண்டும் என பிராந்தியத்திலுள்ள பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி 
வந்துள்ளனர்.
ஆனால் அந்த கோரிக்கைகளை புறந்தள்ளியுள்ள Jolanda தாம் இன்னும் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், குறிப்பாக, பெண்கள் உரிமை, குடும்ப நலம், மற்றும் பாலியல் சமத்துவம் போன்றவைகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.