சனி, 19 டிசம்பர், 2015

அடுத்தடுத்து மீட்கப்பட்ட 2 சடலங்கள் :பொலிசார் அதிர்ச்சியில்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Langenthal என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு வாகனம் பழுதுப்பார்க்கும் இடத்தில் 2 வாலிபரின் சடலங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதே பெர்ன் மாகாணத்தில் உள்ள Laupen என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று இரவு வேளையில், Laupen பகுதி மக்களுக்கு அவசர தகவல் ஒன்றை அளித்துள்ளனர்.
தகவலை பெற்று வந்த பொலிசார், அங்குள்ள ஒரு குடியிருப்பில் 2 சடலங்களை உயிரற்ற நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.
சடலங்களை மீட்ட பொலிசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Langenthal நகரில் கண்டுபிடிக்கப்பட்ட மரணம் கொலையா தற்கொலையா என விசாரணை நிறைவு பெறாத நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் 
அடைந்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கும் புதன் கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை உடனடியாக தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
பெர்ன் மாகாணத்தில் 2 நாட்களுக்குள் 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.