ஞாயிறு, 6 மே, 2018

தமிழ் மொழி பொதுத்தேர்வில் சுவிசில் 5300 மாணவர்கள் பங்குபற்றினர்


சுவிட்சலாந்து தமிழக் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ் n;மாழிப் பொதுத்தேர்வு 24வது ஆண்டாக, 05.05.2018ஆம் நாள் சுவிட்சலாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது.
இத்தேர்வில்pல் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள்
 தோற்றினர்.
பதினோராம் வகுப்புத்தேர்வில் 166 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 127 மாணவரக்ளும் தோற்றியமை சிறப்பாகும்.
தமிழக் ; கல்விச்சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழக் ; குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.
இத்தேர்வின்போது தமிழப்;பள்ளிகளின் முதல்வ்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளராகக் கடமை புரிந்தனர். குறிப்பாக, பழையமாணவர்கள் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழக்; குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக
 உள்ளது.
இவ் வாண்டு பதினோராம், பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வுகள் இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி இளங்கலைமாணி பட்டப்படிப்புக்கான தகமைத்தேர்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக் ; கல்விச்சேவை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ் மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.