செவ்வாய், 18 டிசம்பர், 2018

சூரிச் நகரில் நெடுஞ்சாலையில் விபத்தில் ஒரு பெண் மரணம்

சூரிச் நகரின் A3 நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் பெண் ஒருவர் மரணமடைந்ததுடன் 45 பேர் 
காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் லேசான காயங்களுடன் தப்பிய பயணிகளை அடுத்த பேருந்துக்காக நிர்வாகிகள் அந்த கடும் குளிரில் சுமார் 14 மணி நேரம் காக்கவைத்துள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
16.12.2018.ஞாயிறு காலை சுமார் 4.15 மணியளவில் A3 நெடுஞ்சாலையில் Genoa பகுதியில் இருந்து Dusseldorf செல்லும் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது.
இதில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். எஞ்சிய 41 பேர் லேசான காயங்களுடன்
 தப்பியுள்ளனர்.
விபத்து காரணமாக Brunau மற்றும் Wiedikon பகுதி சாலை போக்குவரத்தை துண்டித்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சூரிச் மண்டல பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் அரு
காமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு 
அனுப்பி வைத்துள்ளனர்.
சுவிஸ் நாட்டவர் ஒருவர், ஜேரமனி நாட்டவர் ஒருவர், இத்தாலியர் 13 பேர், அல்பேனியா நாட்டவர்கள் இருவர் என மொத்த 51 பேர் குறித்த பேருந்தில் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே லேசான காயங்களுடன் தப்பிய பயணிகளை அடுத்த பேருந்துக்காக நிர்வாகிகள் அந்த கடும் குளிரில் சுமார் 14 மணி நேரம் காக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.