வியாழன், 6 டிசம்பர், 2018

பெர்ன் மாநிலத்தில் தனிமையில் இருந்தவர் மீது கொடூர தாக்குதல்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தனியாக இருந்த நபரை தாக்கி மூவர் கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ன் மண்டலத்தின் Unterseen பகுதியில் குறித்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதனன்று இரவு பாதிக்கப்பட்ட அந்த நபர் தமது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூவர் கும்பல் ஒன்று அவரது குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது.
 பின்னர் குறித்த நபரை தாக்கிய கும்பல் அவரை மிரட்டி அங்கிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு 
தப்பியுள்ளது.
கயிறால் பிணைக்கப்பட்டிருந்த அந்த நபர் தனது முயற்சியால் விடுவிக்கப்பட்டு, பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை புகா
ராக அளித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்குப் பதிந்து மாயமான மூவர் கும்பலை 
தேடி வருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.