செவ்வாய், 13 நவம்பர், 2018

ஈழத் தமிழ் அகதிகளுக்கு சுவிஸில் இலங்கை அரசியல் சூழலால் நிம்மதி

சுவிஸ் நாட்டில் அரசியல் அகதி அந்தஸ்துக் கோரியுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சை விடும் சூழ்நிலையை இலங்கை அரசின் தற்போதைய சூழல் ஏற்ப்பாடு 
செய்து கொடுத்துள்ளது.
அண்மைய  காலங்களில் அகதிகள் தொடர்பான மிகவும் கடுமையான கொள்கையைக் கடைப்பிடிக்கும் சுவிஸ் நாட்டில் ஈழத்தமிழர்கள் தொடர்பான குடியேற்றவாசிகளின் நிலை தொடர்பில் சுவிஸ் நாடு சில தளர்ச்சிகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிய 
வருகின்றது.
இலங்கையில் உள்ள அரசியல் சூழ்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதை ஐரோப்பிய நாடுகள் மனித உரிமைச் சபை. மற்றும் அமெரிக்கா பல உலக நாடுகள் மிகவும் கடுமையாக இலங்கை அதிபர் மைத்திரிபால ஸ்ரிசெனவுக்கு கடும் எச்சரிக்கை செய்ததுடன். லண்டன் தனது நாட்டுப் பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம்
 என்று கூடஅறிவித்தது.
இந்நிலையில் சுவிஸ் அரசும் இலங்கை அதிபருக்கு சிலவிடயங்களை எடுத்துக் கூறியதுடன் தொடர்ந்தும் இலங்கையில் நிம்மதியற்ற சூழலும் தொடர்ந்து பதற்ற நிலையிலேயே இலங்கையில் சூழ்நிலை உள்ளதால் சுவிஸ் நாட்டில் அகதி தஞ்சம் கோரியவர்களில் நிராகரிக்கப்பட்டவர்களது நாடுகடத்தல் விடயம் தொய்வு நிலையில் 
உள்ளதாக தெரிகின்றது.
ஐரோப்பிய இன்றியத்தின் பேச்சையும் கேட்காமல் சுவிஸ் அரசு ஆயிரக்கணக்கானோரை நாடுகடத்தியதுடன் பலரை டப்ளின் சட்டப்படி நாட்டை விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டுள்ளதுடன் பலரை வெளியேற்றியும் வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் நல்லிணக்க அரசு கலைக்கப்பட்டு மனித உரிமைச் சபையால் யுத்தக் குற்றவாளி என கூறப்பட்ட இனப்படுகொலையாளி மகிந்தவை  ஜனாதிபதி சட்டவிரோதமாக பிரதம மந்திரியாக  பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டதுடன் பாராளுமன்றை கால வரையறை  இன்றி ஒத்தி வைத்ததுடன் நல்லிணக்க அரசின் பாராளுமன்றைக் கலைத்து அறிக்கை
 வெளியிட்டார்.
இப்படியான இலங்கை அரசின் சர்வாதிகார நடவடிக்கையால் இலங்கை வாழுகின்ற தமிழர்களுக்கு மேலும் அச்சறுத்தல்கள் ஏற்ப்படலாம் என்னும் அடிப்படையில் சர்வதேசத்தின் அறிக்கைகளும் மனித உரிமைச் சபையின் அறிக்கைகளும் இலங்கையில் சுமுக நிலை இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளதால் சுவிஸ் அரசின் எல்லாத்தமிழ் அகதிகள் தொடர்பான விடயம் தற்காலிகமாக கிடப்பில் இருக்கக் கூடிய
 சூழ்நிலையே உள்ளதாக தெரிகிறது.
எனவே சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரி உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு சற்று நிம்மதியான சூழலே நிலவுகின்றது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.