செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தரையில் மோதவிருந்த விமானம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

 சுவிட்சர்லாந்து விமானம்  300 பயணிகளை ஏற்றிச் செல்லும்  விமானம் ஒன்று  இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக எந்த ஒரு பாதிப்பும் இன்றி கனடாவில் இறக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சுவிட்சர்லாந்தின் சர்வதேச விமானமான Boeing 777 என்ற விமானம் கடந்த புதன் கிழமை. Zurich பகுதியில் இருந்து கலிபோர்னியா பகுதிக்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது
வானில் சுமார் 36,000 அடிக்கு மேல் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக கனடாவின் Iqaluit விமான நிலையத்தில் எந்த ஒரு பாதிப்பும் இன்றி பத்திரமாக தரையிரக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதில் வேகமாக வரும் விமானம் அங்கு விமான நிலையத்தில் இருக்கும் பனிகளுக்கிடையே(சுமார் -6 டிகிரி) சீறி பாய்ந்து அதன் பின்னர் நிறுத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சுமார் 14 மணி நேரம் தாமதாமாக சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சுமார் 14 நேரம் தாமதமாக கொண்டு வந்து சேர்த்தால், குறித்த விமான நிறுவனத்தின் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி, அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



$

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.