புதன், 14 மார்ச், 2018

சுவிசில் இருந்து இலங்கையர்கள் சிலர் திருப்பி அனுபப்பட்டனர்

இலங்கை தமிழர்கள் சிலரை நேற்றைய தினம் திருப்பி அனுப்புவதற்கு சுவிஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20இற்கும் மேற்பட்டோர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 5 மணியளவில் விசேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த இலங்கைத் தமிழர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பரவலாக செய்திகள் வெளிவந்தபோதிலும், இந்த தகவல் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது
 குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.