செவ்வாய், 13 மார்ச், 2018

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் கட்டணம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை குறைவாககாணப்பட்ட நிலையில் புகலிடம் கோருவோருக்கான கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் பெரும்பாலான புகலிடம் கோருவோருக்கான மையங்கள் பாதி மட்டுமே நிரம்பின.
அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் 3700 புகலிடம் கோருவோருக்கான படுக்கைகளில் கிட்டத்தட்ட பாதி வெறுமையாக இருந்ததாக SonntagsZeitung என்னும் நாளிதழ் நேற்று செய்தி 
வெளியிட்டது.
இந்த புள்ளிவிவரம் State Secretariat for Migration (SEM)இடமிருந்து பெறப்பட்டது. அதன்படி 2017 ஆம் ஆண்டில் 20 புகலிடம் கோருவோருக்கான மையங்களில் இரண்டில் மட்டுமே முக்கால்வாசி நிரம்பியிருந்தது. தனி நபருக்கான செலவு அதிகரித்ததன் காரணமாக இப்படி நிகழ்ந்துள்ளதாக
 கருதப்படுகிறது.
புகலிடம் கோரும் ஒரு நபருக்கான ஒரு நாள் செலவு 83 சுவிஸ் ஃப்ராங்குகள் என்று அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உணவு, பாதுகாப்பு மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தையும்
 உள்ளடக்கியதாகும்.
2017 ஆம் ஆண்டிலோ இது 132 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்தது. Bernese Oberlandஇலுள்ள ஒரு கிராமத்தில் இந்த தொகை 350 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்தது. இதற்குக் காரணம் அந்த கிராமத்தில் வெகு சில புகலிடம் கோருவோரே இருக்கின்றனர்.
தவறான பட்ஜெட்டால் அரசு 30 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இழப்பதாக SonntagsZeitung குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் SEM என்னும் State Secretariat for Migration,புகலிடம் கோருவோரின்
 எண்ணிக்கையில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சுவிட்சர்லாந்து தயாராக இருக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு புகலிடத் தேவைகள் குறைவாக இருந்ததால் 900 படுக்கைகளை நீக்கியதாகவும் 
தெரிவித்துள்ளது.
அதேபோல் ஞாயிறன்று அரசாங்கம் புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர் ஒருவருக்கு, அவர் அனுபவித்த சித்திரவதை மற்றும் வேதனைக்காக பல ஆயிரம் சுவிஸ் ஃப்ராங்குகளை இழப்பீடாக வழங்கியதை SonntagsZeitung சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.