புதன், 24 ஜனவரி, 2018

சுவிசில் நாட்டில் உலகின் புதுமையான மின் நிலையம் !

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிலையத்தை, ஐஸ்லாந்து நாட்டில்
 நிறுவியுள்ளது.
இந்த மின் நிறுவனம், இதுவரை இல்லாத புதுமையான வழியில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. வழக்கமான அனல்மின் நிலையங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உமிழும்.
ஆனால், இந்த மின் நிலையம் அதற்கு எதிர்மறையாக செயல்பட்டு, மின்னாற்றலை உற்பத்தி செய்கிறது.
இந்த மின்நிலையம், நிலத்தடியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் உள்ள கருங்கல் பாறைகளில் இருந்து கார்பன் -டை-ஆக்ஸைடை உறிஞ்சி, குறைந்த வெப்பநிலைக்கு அதனை உட்படுத்தி மின்சாரமாக
 மாற்றுகிறது.
இந்த தொழில்நுட்பம் ‘கார்பிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை சுவிஸ் விஞ்ஞானிகள் குழு, 2 ஆண்டுகளின் முயற்சியின் பலனாக
 கண்டுபிடித்தது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘பூமி முழுவதும் இந்த பாறை அடுக்கு பரவலாக காணப்படுகிறது. எனவே, மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல், எந்த இடத்திலும் இந்த தொழில்நுட்பத்தில் 
மின் உற்பத்தி செய்ய முடியும்’ என தெரிவித்துள்ளனர்.எனினும், பூமிக்கு அடியில் உள்ள கார்பனை உறிஞ்சுவதன் மூலமாக ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் 
வெளியாகவில்லை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 22 ஜனவரி, 2018

சுவிஸ் நோசத்தை (Neuchâtel) தமிழர் ஒன்றிய விழா சிறப்பாக நடந்தது

சுவிஸ் நோசத்தை   (Neuchâtel)  தமிழர் ஒன்றிய தமிழர் திருநாள் விழா 2018,மாநில உறவுகள் ஒன்று கூடி பொங்கல் கொண்டாட்டம்,இளம் சிறார்களுக்கான
 பண்பாட்டு விழா அமை
ந்திருந்தது தமிழர் திருநாளை நாடுதோறும் மட்டுமல்ல தமிழர்வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் கொண்டாடி நிற்பது தமிழ்  சிறப்புக்களில் ஒன்றாகும் மிக நன்றாகும் வாழ்கவாழ்க  தமிழ்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







திங்கள், 8 ஜனவரி, 2018

எவ்விதமான வரிகள் சுவிஸ்சில் குடியேறியவர்களுக்கு அறவிடப்படுகிறது?

சுவிஸ்சில் குடியேறிய   ஆண் மற்றும் பெண் சுவிஸ் மக்களைப் போன்று ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களுக்கும் வரி செலுத்த வேண்டிய கடமையுண்டு. இதை ஒருவர் வசிக்கும் உள்ளுராட்சிசபைக்கு செலுத்தும்
 வரி உள்ளுராட்சிசபை வரி என்றும்,மற்றும் மாநிலத்திற்கு செலுத்தும் வரி மாநில வரி என்றும், மத்திய அரசிற்குக் கொடுப்பது- இதை நேரடியான மத்திய அரசவரி என்றும் அழைப்பர்.
வரி பெறும் திட்டம் அதிகமான நபர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு வரி அறிவித்தலை நிரப்ப வேண்டியதாக ஒழுங்குபண்ணப்பட்டுள்ளது. இதில் நீங்கள், கடந்த வருடம் எவ்வளவு ஊதியம் 
பெற்றுள்ளீர்கள், எவ்வளவு சொத்துகள் உள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்த வரி அறிவித்தலை உள்ளுர் வரித் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும். இது வரியின் அளவைக் கணிப்பதுடன் அதைப் பட்டியலிட்டுக் காட்டும்.
சுவிசில் குவெலென் வரி என ஒன்றுள்ளது. இது தொழில் வழங்குனரால் நேரடியாக வரி செலுத்தும் கடமையுள்ள நபரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும். அவர்கள் இந்த வரியை ஒவ்வொரு முறையும் ஊதியத்திலிருந்து கழித்து அதை வரித்திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் 
நிரந்தர வதிவிட அனுமதி c இல்லாத ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்கள், எவராவது நிரந்தர வதிவிட அனுமதி c உள்ளவரை அல்லது சுவிஸ் பிரஜாவுரிமை உள்ளவரைத் திருமணம் செய்திருந்தால் இது அவர்களுக்குப் பொருந்தாது. ஒவ்வொரு மாநிலங்களையும் பொறுத்து குவெலென் வரி வித்தியாசமான தொகையாக இருக்கும், இது வருடத்திற்கு
 வருடம் மாறுபடும்.
ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களிடமிருந்து இரு தடவைகள் வரி பெறுவதைத் தடுப்பதற்காக – சுவிசிலும் அவர்களின் தாய்நாட்டிலும்- சுவிஸ் 50 க்கு மேலான நாடுகளுடன் இரட்டை வரி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் வரி ஏய்ப்பு விடயங்களின்போது ஒரு
 முக்கிய பங்கை வகிக்கும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 27 டிசம்பர், 2017

சுவிசில் ரயில் கட்டணங்கள் அடுத்தாண்டு குறைக்கப்படும்;

சுவிஸில் மதிப்பு கூட்டு வரிகள் குறைக்கப்படுவதன் விளைவாக ரயில் கட்டணங்களும் அடுத்தாண்டு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரியானது 8லிருந்து 7.7 சதவீதமாக வரும் ஜனவரி முதல் குறைக்கப்படவுள்ளது, இதன் காரணமாக
 யூன் மாதம் முதல் சுவிஸ் ரயில் பயண கட்டணங்கள் 0.3 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்படவுள்ளதாக நாட்டின் பொது போக்குவரத்து தொழில் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பழைய ஓய்வூதிய திட்டத்தை விரிவாக்கம் செய்யலாமா என கடந்த செப்டம்பர் மாதம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் வாக்காளர்கள் அதை நிராகரித்தனர்.
இதன் காரணமாகவே நாட்டின் மதிப்பு கூட்டு வரி குறைக்கப்படவுள்ளது, சுவிஸில் ரயில் பயண கட்டணங்கள் குறைக்கப்படும் அதே வேளையில் ஜேர்மனியில் இந்த மாதம் 2 சதவீத கட்டணம் 
உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல பிரித்தானியாவில் வரும் ஜனவரி 2-ஆம் திகதி முதல் 3.4 சதவீதம் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது 
குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






சனி, 9 டிசம்பர், 2017

தொடர்வண்டி (TRAM) போக்குவரத்து சுவிஸ் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஆரம்பம்.

பாசல் மாநில போக்குவரவு சேவையான BVB நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாசல் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள ஜேர்மனியின் Weil am Rhein நகரின் தொடருந்து நிலையம் வரை Tram போக்குவரத்தை  விஸ்தரித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக பாசல் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் எல்லை நகரான St louis நகரின் தொடருந்து நிலையம் வரை தனது போக்குவரத்தினை விஸ்தரிக்க நீண்ட காலமாய் எடுத்த முயற்சி இன்று நடைமுறைக்கு வருகின்றது
இன்று மதியம் ஒரு மணியளவில் உத்தியோகபூர்வமான போக்குவரவு ஆரம்பமாகவுள்ளது. இன்று மதியம் ஒரு மணி முதல் இரவு ஆறு மணி வரை இலவசமாக பயணஞ் செய்ய முடியும். இச் சேவையை வரவேற்கும் முகமாக இரு நாடுகளிலும் பல தரப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்
 நடைபெறவுள்ளன.
கீழே இணைக்கப்பட்டுள்ள இரண்டாவது படத்திலுள்ள அட்டைகள் பாசல் மாநிலத்தின் அனைத்து Tram மற்றும் பேருந்துக்களிலும் உள்ளது. அதை எடுத்துச் செல்பவர்களுக்கு இலவச குளிர்பானம் 
காத்திருக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 24 நவம்பர், 2017

ஈழத் தமிழர்கள் சுவிசில் இருந்து நாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ளனர்!?

சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் 
அபாயம் எழுந்துள்ளது.
சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிற்ஸர்லாந்து அரசின் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா நேற்றைய தினம் ஸ்ரீலங்காவின் உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவின்னவுடன் குடியேறிகள் தொடர்பான உடன்படிக்கை ஒன்றை
 கைச்சாத்திட்டார்.
இந்த உடன்படிக்கை ஊடாக சுவிற்ஸர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் அரசியல் தஞ்சக் கோரிகளுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்றும், குடிவரவுத் துறையில் தாங்கள் நடைமுறைப்படுத்திவரும் நடைமுறைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் மூன்று நாள் விஜயமாக ஸ்ரீலங்கா வந்துள்ள சுவிற்ஸர்லாந்து நீதி அமைச்சர்
 தெரித்துள்ளார்.
அதேவேளை, இந்த உடன்படிக்கை அரசியல் தஞ்சக் கோரிக்களை நாடு கடத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸர்லாந்தில் 50 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் ஆவர். கடந்த 30 வருட யுத்தம் காரணமாக ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் உட்பட உயிர் ஆபத்துக்களை அடுத்தே இவர்கள் புலம்பெயர்ந்து சுவிஸர்லா்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இவர்கள் உட்பட புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் உட்பட புலம்பெயர் சமூகத்தினர் நாடு திரும்ப வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதை அடுத்து ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளும், தனி மனித சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிவரும் சுவிஸர்லாந்து உட்பட மேற்குலக நாடுகள், ஈழத் தமிழர்களின் அரசியல் தஞ்சம் கோரிக்கைகளை நிராகரித்து வருவதுடன், உடனடியாக நாடு கடத்தியும்
 வருகின்றன.
எனினும், ஸ்ரீலங்காவில் இன்னமும் இயல்பு நிலை ஏற்படவில்லை என்றும், நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அரச படையினராலும, புலனாய்வுத் துறையினராலும் கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சுவிஸர்லாந்து அரச சார்பற்ற அமைப்புக்கள் மாத்திரமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்து 
வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுவிஸர்லாந்து நீதி அமைச்சரை சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும் அளவிற்கு நிலமை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று
 கூறியிருந்தார்
மிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டம் அமுலில் இருப்பதால், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறை வைக்கப்படும் நிலமையும், சித்திரவதைகளுக்கு ஆளாகும் அபாயமும் இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பத்து 15 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்காத நிலையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக கருத முடியாது என்றும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளிய நிலையில், ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும் சுவிஸர்லாந்து அரசின் குடியேறிகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, ஸ்ரீலங்கா அரசுடன், அரசியல் தஞசக் கோரிகளை நாடு கடத்துவதை உறுதிசெய்யும் உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருக்கின்றார்.
சுவிஸர்லாந்து அரசு சித்திரவதைக்கூடத்திற்குள் மக்களை தள்ளிவிடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள சுவிஸ்ர்லாந்து நீதி அமைச்சர் சிமோனெட்டா 
சோம்மருகா, இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நாடு கடத்துவதற்கு முன்னர் நாடு கடத்தப்படவுள்ள அனைவரும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுவார்கள் என்று அவர்
 தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு உதவிகள் தேவையா அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கலாமா, அல்லது நாடு கடத்துவது சரிதானா, அது நியாயமான தீர்மானமா என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிஸர்லாந்து நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும் அடுத்துவரும் தினங்களில் ஸ்ரீலங்காவுடன் புதிதாக ஏற்படுத்திக்கொண்ட குடியேறிகள் தொடர்பான புதிய உடன்படிக்கைக்கு அமைய சுவிஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அகதிகளின் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச அமைப்புக்களும், அகதிகள் சட்டத்தரணிகளும் எச்சரிக்கை
 விடுத்துள்ளனர்.
அது மாத்திரமன்றி சுவிஸர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஸ்ரீலங்காவுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித்து அவர்களை நாடு கடத்தக்கூடிய ஆபத்து நீடிப்பதாகவும் அகதிகள் தொடர்பான சட்ட நிபுணர்கள்
 தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இவற்றை நிராகரிக்கும் சுவிஸர்லாந்து அரசு, கடந்த யூலை மாதமும் ஈழத் தமிழர் ஒருவரின் அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக 
அறிவித்துள்ளது.
அதேவேளை சுவிஸர்லாந்து குடிவரவுத்துறை அலுவலகத் தகவல்களுக்கு அமைய 2016 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கையர்களின் 1316 அரசியல் தஞ்சம் கோரிய விண்ணப்பங்கள் தீர்மானம் எடுக்கப்படாது வைக்கப்பட்டிருப்பதாக அந்த அலுவலக புள்ளி 
விபரங்கள் கூறுகின்றன.
அதேவேளை இந்தக் காலப்பகுதியில் இலங்கையர்கள் ஐயாயிரம் பேர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்ததாகவும். இவர்களில் 3674 பேருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இவர்களில் 1613 பேருக்கு பாரிய உயிர் ஆபத்து இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுவிஸர்லாந்து குடிவரவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 23 நவம்பர், 2017

அகதியாய் வெளிநாட்டுக்கு 1985 ஆம் ஆண்டுகளில் வந்த தமிழர்கள் பட்ட துன்பங்கள்

1985 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு அகதியாய் வந்த தமிழர்கள் என்ன பாடுபட்டார்கள், அகதியாய் வந்தவர்கள் ஆரம்ப காலங்களில் எவ்வளவு கஸ்ரங்களுக்கு மத்தியில் மொழி தெரியாமல் வேலை தேடினார்கள், அகதி முகாம்களில் எப்படியிருந்தார்கள் என்பதையெல்லாம்
 பிரதிபலிக்கும் 
• நாட்டில இருந்து வெளிநாடு வந்தவர்கள் எவ்வளவு அழகாகவும், ஜடாமுடியுடனும் இருந்தார்கள் என்பதை .
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வசதியாக வாழ்வதாகவே எல்லோரும் “கற்பனையில்” நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் பட்ட, படும் கஸ்ரம் பலருக்கு புரிவதில்லை.இதனை பிரதிபலிக்கும் விதமாக 1986ம் ஆண்டளவில் சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநிலத்தில் உள்ள சொலிகோபன் எனும் இடத்தில் அமைந்திருந்த “அகதி முகாமில்” படமாக்கப்படட
 திரைப்படம் இது.
மேற்படி அகதி முகாமில் மொத்தமாக ஐம்பது பேர் வசித்து வந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.1986ம் ஆண்டளவில் சுவிஸ் உட்பட ஐரோப்பிய நாடெங்கும் அகதிகளின் வருகை காரணமாக இனத்துவேசம் ஓரளவு காணப்பட்ட போதிலும், சுவிஸ் நாட்டு வயதானவர்கள், தமிழர்களை பராமரித்து சாதாரண (பண்ணை) வேலை வழங்க பின் நிற்க்கவில்லை. ஆயினும் அன்றைய கால கட்டத்தில் “ஒரு நாள் சம்பளம்” நான்கு 
அல்லது ஐந்து பிராங் மட்டுமே.. ஆகக்கூடிய சம்பளம் ஏழு சுவிஸ் பிராங்.இருப்பினும் இந்த சம்பளத்தை பெறுவதுக்காகவேனும் காலையில் எழுந்து வீடுவீடாக சென்று வேலை கேட்பதும், மாலையில் அகதி முகாம் வந்து, வலைப்பந்து விளையாடி, முடிவெட்டிக் குளித்து,
 சாப்பிட்டு, எல்லோரும் 
ஒரு அறையில் இருந்து (ஐம்பது ராப்பன் கொடுத்து) படம் பார்ப்பதும், ஊரில் இருந்து உறவுகளிடம் இருந்து வரும் கடிதங்களை பார்த்து சந்தோசம் அடைவதும், மாலை நேரங்களில் உதைபந்து விளையாட்டு, ரெஸ்ர்லிங் போன்றவற்றை பார்ப்பதும், நித்திரையுமாகவே 
வாழ்க்கை..
இலங்கை புதினங்களை கிழமையில் ஒருமுறை வரும் பத்திரிகையை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்வதுடன், “தமிழீழ தகவல் நடுவத்தால்” ஒளிபரப்பாகும் செய்திகளை, தினம்தோறும் பதிவு செய்து அதனை மீண்டும் கேட்டு, எழுதி விளம்பர பலகையில் ஒட்டி அனைவரும் விழுந்தடித்து பார்ப்பதே வழமை. (இப்போது போல் அக்காலத்தில் கொம்பியூட்டர்
 வசதி இல்லை)அகதிமுகாமில் வைத்து கிழமைக்கு கிழமை தரும் பணத்தை பெறுவதுக்காகவே வரிசையில் நிற்பதும், கடைக்கு அழைத்து சென்று பொருட்க்கள் வாங்குவதும், எப்போதாவது ஒருநாள் உயிர்க்கோழியை வாங்கி உரித்து சமைத்து சந்தோசமாக 
சாப்பிடுவதும், யாருடைய பிறந்த நாளையாவது “எப்போதோ ஒருநாள்” சந்தோசமாக கொண்டாடும் போது மட்டுமே, விருந்து போல் சாப்பிடுவதும், சென்சிலுவை சங்கத்தினால் தரப்படும் உடுப்புக்காக வரிசையில் நின்று வாங்குவதும், காசு கிடைத்ததும் ஊரில் உள்ள உறவுகளுடன் தொலைபேசியில் 
கதைப்பதுமான வாழ்க்கை
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
Blogger இயக்குவது.