சனி, 2 பிப்ரவரி, 2019

தமிழர்களின் கொண்டாட்டங்களுக்கு சுவிசில் வர உள்ள நெருக்கடி

.
சுவிற்சர்லாந்தில் கடந்த காலங்களில் பல மாநிலங் noகளில் வாடகைக்கு மண்டபம் எடுத்து கொண்டாட்டங்கள் செய்வது வழமையாக காணப்பட்டது.
எனினும் இவ்வாறு கொண்டாட்டங்களுக்காக மண்டபங்களை வாடகைக்கு எடுப்பவர்கள் சரியான வகையில் அதனை கையளிக்க தவறுவதால் மண்டப உரிமையார்கள் இலங்கை தமிழர்களின் நிகழ்வுகளுக்காக மண்டபம் கொடுப்பதில்லை 
என முடிவெடுத்துள்ளனர்.
சூரிச், வேர்ன், வாசல், லுட்சர்ன், செங்காலன், துர்கவ், ஜெனீவா, லவ்சார் மற்றும் இன்னும் பல பிற மாநிலங்களும் உள்ள மண்டப உரிமையாளர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
காரணம் என்னவெனில் நிகழ்விற்காக பெற்ப்படும் மண்டபங்கள் சரியான வகையில் மீள கையளிக்கப்படாமையே ஆகும்.
அத்துடன் மண்டபம் பெறுபவர்கள் மது போதையில் மண்டப மேற்பார்வையாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதுடம் இந்த தீர்மானம் எடுக்கப்படுவதற்கான ஒரு காரணம் என தெரியவருகிறது. தற்போது ஒரு சில மண்டபங்களே வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இவையும் எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் திரைப்படங்களை காட்சிப்படுத்துவதற்கு கூட பல மண்டபங்கள் தடை விதித்திருப்பமை குறிப்பிடத்தக்கது.
சில வேளை இப்படி எழுதுவது சுவிற்சர்லாந்தில் உள்ள இலங்கையர்களிற்கு பிடிக்காமல் இருக்கலாம் இது எல்லாம் ஏன் செய்தியாக்க வேண்டும் என என்ற கேள்விகளும் வரலாம் அப்படியான சந்தேகத்தை தவிர்ப்பதற்காக விபரங்களுடன் விரைவில்
 ஆதாரம் வெளியிடப்படும்
உலகில் பழக்க வழக்கம் மற்றும் கலாச்சாரங்களில் உயர்வாக பார்க்கும் தமிழ் இனம் இன்று இந்த விடயங்களில் மதிப்பும் மரியாதையும் இழந்து வருவது உணர்வுள்ள தமிழனுக்கு மரியாதைக் குறைவாக உள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள் அடுத்த தலைமுறையையும் சரியான பாதையில் இன்றுள்ள பெரியவர்கள் வழிநடத்த தவறியுள்ளனர் என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 17 ஜனவரி, 2019

ஈழத்தமிழ் பெண் சுவிட்ஸர்லாந்தில் வாகன விபத்தில் மரணம்

சுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf Regensdorf பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் பெண் ஒருவர்
 அகாலமரணம் 
தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச்Regensdorf தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் அப்பள்ளியின் முதல்வரின் துணைவியாருமான திருமதி சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16.01.2019 பிற்பகல் பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.
அன்னாரின் நல்லடக்க திகதி பின்பு அறியத்தரப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அவரின் ஆத்மா அமைதிபெற பிரார்த்திப்போம்
தகவல்: குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 4 ஜனவரி, 2019

இனி சுவிஸ்சில் டார்ஜிலிங் மலை ரயில் வாரத்தின் எல்லா நாட்களிலும் சேவை

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மலை ரயில் நிலையம் ஒன்று மூன்றாவது முறையாக மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Junfraujoch ரயில்பாதை 1912ஆம் ஆண்டு போடப்பட்டது.
அந்த பாதை போடப்பட்ட முதலாண்டிலேயே 42,000 சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான ரயில் நிலையமான Jungfraujoch ரயில் நிலையத்திற்கு 1,067,000 சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளார்கள்.
பொதுவாக பனிச்சறுக்கு விளையாட்டிற்காகவே சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம் என்பதால், இம்முறை பனி குறைவாக இருந்ததால் பிரச்சினை இருக்கும் என்பதற்காக செயற்கையாக பனி உருவாக்கப்பட்டு அங்கு கொட்டப்பட்டது.
பனி குறைவாக இருந்ததால் கடந்த ஆண்டு பனிச்சறுக்கு விளையாடுவதற்காக மட்டும் மலை ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.9 சதவிகிதம் குறைந்தது.
ஆனாலும் ஐரோப்பாவின் உயரமான ரயில் நிலையத்தை சுற்றிப்பார்க்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள் ரயில் போக்குவரத்தை விரும்பியதையடுத்து 2017ஆம் ஆண்டு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை 
2.4 சதவிகிதம் உயர்ந்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>









புதன், 2 ஜனவரி, 2019

ஜனவரி மாதம்.2019. முதல் சுவிஸில் புதிய சட்டம் நடைமுறை

சுவிஸர்லாந்தில் புதிய ஆண்டு முதல் போக்குவரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
சமஷ்டி பேரவை நிறைவேற்றிய வாகன போக்குவரத்து திருத்தச் சட்டங்கள் ஜனவரி 1 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 
அமுலுக்கு வரவுள்ளன.
இதனடிப்படையில், மருத்துவப் பரிசோதனை, அடிப்படையான சாரதி பயிற்சி மற்றும் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்லல் தொடர்பில் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் புதிய சாரதிகள் அனைத்து வகையான வாகனங்களையும் ஓட்ட முடியும் என்பதே முக்கியமான மாற்றம். ( Automaten-Fahrer dürfen ab Februar schalten)
சாரதி அனுமதிப்பத்திரத்தில் எந்த வரையறையும் உள்ளடக்கப்பட மாட்டாது. பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்போர், போக்குவரத்து வரம்புகளை நீக்குவது தொடர்பில் வீதி போக்குவரத்து அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
போக்குவரத்து மருத்துவ சோதனை
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி மருத்துவ சோதனைக்கான வயது வரம்பு அமலுக்கு வரும். 75 வயதிலிருந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதுவரை, இந்த கடமை ஏற்கனவே 70 ஆண்டுகள் இருந்தன.
இதேவேளை, சமஷ்டி புள்ளவிபர அலுவலகத்திற்கு அமைய, சூரிச் பிராந்தியத்தில் 2017 ஆம் ஆண்டு தானியங்கி மற்றும் கைமுறையான எரிசக்தி நிரப்பும் மையங்கள் இருந்தன. புதிய போக்குவரத்து நடைமுறைகள் தானியங்கி மின்சார வாகனங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 28 டிசம்பர், 2018

பொது இடங்களில் சுவிட்சர்லாந்தில் பார்ட்டிகளுக்கு தடை

சுவிட்சர்லாந்தின் ஒன்பது கேன்டன்களில் மதம் சார்ந்த பண்டிகைகளின்போது நடனமாடுவதற்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், Glarus பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த தடையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் 
இறங்கியுள்ளார்கள்.
பொலிசார், இந்த ஆண்டு, பண்டிகைகளின் போது மட்டுமல்லாமல், பண்டிகை நாட்களுக்கு முந்தின மாலைப் பொழுதுகளிலும் இந்த தடை நீடிக்கும் என கலை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகளின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ், புனித வெள்ளி மற்றும் உயிர்த்தெழுதல் பண்டிகைகளின்போது நடத்தப்படும் நடனம், இசை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இரவு விடுதிகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் பார்ட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது, அதுவும் அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில்.
 Glarus பகுதி மக்கள், 600 ஆண்டுகளாக ஆண்டுக்கொருமுறை பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் மக்கள் கூடுகைக்கு இந்த ஆண்டு அனுமதி கோரி நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>


செவ்வாய், 25 டிசம்பர், 2018

அகதி அந்தஸ்து சுவிசில பெற்றவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்

ஒருவர் பிறந்த தாய் நாட்டில்  தனக்கு உயிருக்கு ஆபத்து என்பதால் உயிர் தப்புவதற்காக உயிர்காப்பு கோரி சுவிட்சர்லாந்துக்கு
 வந்து அங்கு அரசியல் அகதிகளாக சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக் கோரி சுவிஸ் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால்  உங்களுக்கு அகதி அந்தஸ்து  ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள்.
அகதி அந்தஸ்து கிடைத்ததும் அவர்களுக்கு B அடையாள அட்டை  கொடுக்கப்பட்டு அவர்களது சுவிஸ் நாட்டில் வாழும் அனைத்து தேவைகளையும் சுவிஸ் அரசே ஏற்றுக்கொண்டு அவர்களுக்குத் தேவையான கல்வி இருப்பிடம் மருத்துவக் காப்புறுதி மற்றும் 
குடும்பத்தாரை அவர்களது தாய்நாட்டில் இருந்து வரவழைத்து குடும்ப சகிதமாக வாழவைத்து ஒரு தொழிலைத் தேடும்வரை 
அனைத்தையும் சுவிஸ் 
அரசே கவனிக்கும்.
இப்படி இருப்பவர்கள் தங்களை நிலை நிறுத்தியதும் இவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது சுவிட்சர்லாந்தில் சட்டதிட்டத்திட்க்கு அமைய  அமைய அவர்கள் தங்களது தாய் நாட்டிற்க்கு போகமுடியாதவாறு அவர்களுக்கு தடை செய்யப்பட்ட போக்குவரத்து அனுமதி 
பயனப்பத்திரம் வழங்கப்படும்.
 அதையும் மீறி மாற்று வழிகளிலோ அல்லது இலங்கை அரச அல்லது வேறு வழிகளில் தொடர்பு என நிரூபிக்கப்பட்டால் அவர்களது அகதி அந்தஸ்து என்னும் சட்டப்பூர்வ உரிமையை அவர்கள் இழப்பார்கள் அத்துடன் அவர்களது அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு அவர்கள் அவர்களது தாய் நாட்டிற்க்கு நாடுகடத்தப் படுவார்கள்  என்பது சட்டம்.
ஆனால் இப்போது  இந்த சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது சுவிஸ் அரசு.அதாவது, இனி தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லும் அகதிகள், தங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய 
கட்டாயம்  இருந்தால் அதன் அவசியத்தை விவரித்து தாங்கள் தாங்கள் 
தங்களது தாய் நாட்டிற்க்கு போகவண்டிய அவசியத்தை வெளிப்படுத்தி அவர்கள் போய் வந்தால் .அவர்களது அகதி என்னும் சட்டப்பூர்வ உரிமையை அவர்கள் இழக்கமாட்டார்கள் என்னும் சட்ட மாற்றம் சுவிட்சர்லாந்தில்
 கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு அற்றுக் கொல்லப்பட்டு பாராளுமன்ற வாக்கெடுப்பில்  இந்த சட்டத்திற்கு ஆதரவாக 199 பேரும் எதிர்த்து 66 பேரும் வாக்களித்துள்ளனர்.எதிர்த்து வாக்களித்தவர்கள் conservative right Swiss People's Party என்னும் 
கட்சியினர் மட்டுமே.
அதிகளவான இலங்கையர்கள் அகதி என்னும் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்று அவர்களது அகதி அந்தஸ்து ஏற்றுக் கொல்லப்பட்டதும் அவர்களுக்கு B அடையாள அட்டை வழங்கப்பட்டு கடந்த ஆண்டுவரை 5 வருடங்களில் அவர்களுக்கு C அடையாள அட்டை வழங்கப்பட்டது அதாவது நிரந்தர வதிவுடமை  இவர்களுக்கு கிடைக்கும்.
இவர்களுக்கு நிரந்தர வதிவுடமை கிடைத்ததும் சுவிஸ் நாட்டின் நிரந்தர வதிவுடமை சட்டத்தினால் இவர்கள் உடனேயே தங்களது  அங்கீகரிக்கப்பட்ட அகதி அந்தஸ்தை நிராகரித்து மீண்டும் தங்களது தாய்நாட்டின் பாஸ்போர்டைப் பெற்று தங்களது தாய் நாட்டிற்க்கு
 அடிக்கடி போய் வருவார்கள்.
தற்போதைய இலங்கையின் சுமுகமன அரசியல் சூழ்நிலையால் அதனை மாற்றி சாதாரண சுவிட்சலாந்தின் வீ அனுமதி அட்டையைப் பெற்று பின்னர் இலங்கை கடவுச்சீட்டினையும் பெற்று இலங்கை சென்று வந்தனர்  இநத விடயம் சுவிஸ் குடி வரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்ததனால் சுவிஸ் அரசியல் வாதிகளால் இநத விடயம் பாராளுமன்றம் வரை சென்று இன்று சட்டரீதியானான்கீகாரம் கிடைத்துள்ளது.
இப்படியான  சட்டசிக்கல்களின் தயவால் அகதி அந்தஸ்து இழந்த பலருக்கு  Fவிசா வழங்கப்பட்டுள்ளது இனிமேல் இப்படிப்பட்ட நிலை இல்லாமல் போக பாராளுமன்றில் இநத சட்டம் இனிதே நிறைவேற்றப்பட்டுள்ளது உங்களுக்கு கிடைத்த ராஜ ஜோகம்.
இவ் அறிவிப்பின் சட்ட திட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்குமா  எனும் கேள்விகளிற்கு இன்னமும் வெளிப்படையாக தெளிவு படுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 20 டிசம்பர், 2018

கடந்த சில ஆண்டுகளில் சுவிசில் புற்று நோயால் இறந்த பல ஆண்கள்

சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக டந்த சில ஆண்டுகளில் மரணமடைந்த ஆண்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால் இறந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 64,964 பேர் மரணமடைந்துள்ளனர். இது அதன் முந்தைய ஆண்டைவிடவும் 4 
விழுக்காடு குறைவாகும்.
ஆனால் இதில் முதன் முறையாக மரணமடைந்த ஆண்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால் இறந்துள்ளது ஆய்வில்
 தெரியவந்துள்ளது.
இருப்பினும் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் 17,808-ல் இருந்து 17,201 என சரிவடைந்துள்ளதாகவும் ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு பெரும்பாலான இறப்புகள் காய்ச்சல் மற்றும் வெப்பக்காற்று காரணமாக நிகழ்ந்துள்ளது.
மட்டுமின்றி சுவிஸில் இருதயம் தொடர்பான இறப்புகள் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள்
 சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் டிமென்ஷியா காரணமாக 3,975 பெண்களும் 1,789 ஆண்களும் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விடவும் 9 விழுக்காடு 
அதிகமாகும்.
சுவிட்சர்லாந்தில் ஆயிரம் குழந்தைகளில் 3.6 பேர் முதல் ஆண்டுக்குள் இறப்பதாகவும், 12,000 சிறார்களில் ஒருவர் தங்களது 16-வது வயதுக்குள் இறப்பதாகவும் ஆய்வறிக்கை 
சுட்டிக்காட்டியள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




Blogger இயக்குவது.