செவ்வாய், 18 அக்டோபர், 2016

சுவிஸில் கொள்ளை கூட்டத்தின் தலைவன் கைது!!!

சுவிஸில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Fribourg மாகாணத்தின் bulle மாவட்டத்தில் 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சுவிஸ் நாட்டை சேர்ந்த 23 வயது இளைஞனை அதிரடியாக கைது செய்துள்ளனர். விசாரணையில் அவன் அப்பகுதியில் குடியேறிகள் போல் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
பொலிசார் அளித்துள்ள தகவலில், சோதனையில் பல திருட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், Bulle நகரில் கட்டிடங்கள் மற்றும் பல்வேறு கடைகளின் அடித்தளத்தில் 2015 மற்றும் பிப்ரவரி 2016 க்கும் இடைப்பட்ட காலத்தில் திருட்டப்பட்ட பொருட்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கைதுசெய்யப்பட்ட போர்த்துகீசிய மற்றும் மொராக்கோ நட்டை சேர்ந்த குடியேறி இளைஞர்கள் குறித்த கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.