புதன், 18 ஏப்ரல், 2018

ஈழ தமிழர் சுவிஸில் தேர்தலில் அமோக வெற்றி

சுவிட்ஸர்லாந்து தேர்தல் ஒன்றில் ஈழ தமிழர் ஒருவர் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக
 வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 15 ம் திகதி இடம்பெற்ற குறித்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அவர் இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140 இற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.
சோசலிசக் கட்சி சார்பில் குறித்த நகர சபைக்கு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி ஐந்தாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது 
குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.