ஞாயிறு, 31 மார்ச், 2019

சுவிட்சர்லாந்து வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறது

சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை
 வெளிப்படுத்துகிறது.
வெளிநாட்டவர்கள் பொருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என பெரும்பாலான சுவிஸ் நாட்டவர்கள் (64%) கருதுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மற்றவர்கள் செய்யாத வேலைகளையும் வெளிநாட்டவர்கள் செய்வார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது (66%).
அதே நேரத்தில், சமூக பாதுகாப்பு அமைப்பை வெளிநாட்டவர்கள் தவறாக பயன்படுத்துவதாக கிட்டத்தட்ட பாதிப்பேர்
 (47%) நினைக்கிறார்கள்
அதேபோல, வெளிநாட்டவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிப்பதாக சிலரும் (28%), சுவிட்சர்லாந்து குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நல்ல கல்வியை தட்டிப்பறிப்பதாக சிலரும் (28%), தெருக்களில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக சிலரும் (28%) கருதுகிறார்கள். இந்த ஆய்வில் 3,127 பேர் பங்கேற்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.