வெள்ளி, 17 நவம்பர், 2017

மனித உரிமைகள் நிலைமைகள்பற்ரி சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு…சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் குடிவரவுக்கான பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ்இன்போ இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.
குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் உரிமைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, இப்போது தஞ்சம் கோரும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்.
அத்துடன் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளது” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வெள்ளி, 10 நவம்பர், 2017

சுவிசில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பயனுள்ள தகவல்

சுவிட்சர்லாந்தில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கான பயனுள்ள தகவல் இதுவாகும்.
Organization for Economic Cooperation and Development-ன் படி அமெரிக்கா, லக்சம்பெர்க்கை அடுத்து சுவிட்சர்லாந்தில் சம்பளம் அதிகம், ஏனெனில் ஐரோப்பாவை பொறுத்த வரையில் வாழ்வதற்கு அதிக விலையுயர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.
ஆண்- பெண்களுக்கு இடையேயான சம்பள விகிதமும் இங்கு அதிகம், ஐரோப்பிய நாடுகளில் இங்கு தான் அதிகளவு வித்தியாசம் உண்டு. சமீபத்திய ஆய்வின் படி ஆண்களை விட பெண்களுக்கு 19.3 சதவிகிதம் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது, குறிப்பாக 
சுவிட்சர்லாந்து பெண்களை விட வெளிநாட்டை சேர்ந்த பெண்களுக்கு சம்பளம் குறைவு.வருடத்திற்கு சுவிட்சர்லாந்தில் 20 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுகிறது, ஆகஸ்ட் 1ம் திகதி சுவிஸ் தேசிய தினத்தன்று அனைத்து மாகாணங்களிலும் விடுமுறை 
வழங்கப்பட்டாலும், மற்ற பொது விடுமுறைகள் மாகாணங்களை பொறுத்து வேறுபடுகிறது.
சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை/பணி இரண்டுக்கும்மான Balance-யை சமமான முறையில் கொண்டு செல்ல முடியும், இதன் காரணமாகவே உலகளவில் வாழ்வதற்கு மிகச்சிறந்த நாடுகளின் பட்டியலிலும்
 இடம்பிடித்துள்ளது.
சுவிசின் சட்டப்படி, நிறுவனம் தொழிலாளரை ஒரு வாரத்திற்கு 45 மணிநேரம் பணியாற்ற அழைக்கலாம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது அதிகம். பிரான்சில் வாரத்திற்கு 35 மணிநேரமும், பிரித்தானியாவில் 36.5 மணிநேரமும் பணியாற்றுகின்றனர்.
ஒரு ஆண்டுக்கு வேலை செய்த பின்னர், வேலையை இழந்துவிட்டால் அவர்களுக்கு அதிகளவான சலுகைகள் கிடைக்கும், இதேபோன்று ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்திற்கும்
 அதிகமாக
 பணியாற்றினால் குறித்த நிறுவனம் உங்களுக்கான விபத்து காப்பீட்டை செலுத்த வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்காக 14 வார சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது, தந்தைமார்களுக்கு பெரும்பாலும் குழந்தை பிறந்த அன்றைய தினம் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது, இதேபோன்று பணியாற்றும் தாய்மார்களாக இருப்பின் குழந்தை வளர்ப்புக்கும் அதிக தொகை செலவிட வேண்டும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 19 அக்டோபர், 2017

சுவிஸ் மணமகளை திருமணம் செய்யவிருந்த இளைஞன் மரணம்!

இலங்கையின் தென்பகுதியான பேருவளையில் உயிரிழந்த இளைஞனின் உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது
வாகன விபத்தில் உயிரிழந்த 26 வயதுடைய இளைஞனின் கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகிய உடற் பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த இளைஞர் அடுத்த மாதம் சுவிஸ்ட்சர்லாந்து பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைய ஆயத்தமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பேருவளை, மொரகல்ல பகுதியை சேர்ந்த சுரேஷ் அபேகுணவர்தன என்ற இளைஞன் வாகன விபத்துக்குள்ளான நிலையில் அவர் மூளைச் சாவடைந்துள்ளார்.
இதனால் அவரது உடற்பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற மரண விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் தந்தை வாக்குமூலம் வழங்கிய போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
‘உயிரிழந்தவர் எனது மகன். எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்மார்கள் உள்ளனர். உயிரிழந்த மகன் மொரகல்லவில பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான விடுதியை நடத்தினார்.
17ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் நான் உறங்கி கொண்டிருந்த போதுஇ மனைவி மற்றும் கடைசி மகன் சத்தமாக மூத்த மகன் விபத்துக்குள்ளாகியதாக கூறினர்.
மகனை பார்க்க சென்ற போது அவர் மூளைச் சாவடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைக்க முடியாதெனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரது உடற்பாகங்களை தானம் வழங்க விருப்பம் என கூறினோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





சுவிசில் பலியான இளைஞனின் குடும்பம் சுவிஸ் வர அழைப்பு

சுவிட்ஸர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் அகதிகள் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கரன் என்பவர் அண்மையில் சுவிஸ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். மரணமானவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அவரின் குடும்பத்தினருக்கு சுவிஸ் அரசாங்கம் அ
ழைப்பு விடுத்துள்ளது.
முல்லைத்தீவை சேர்ந்த சுப்பிரமணியம் கரனின் வீட்டிற்கு சென்றிருந்த சுவிஸ் தூதரக அதிகாரிகள், குடும்பத்தாரின் நிலையையும் பார்வையிட்டிருந்தனர்.இதனையடுத்து நேற்று முன்தினம் குடும்ப உறுப்பினர்கள் சுவிஸ் தூதரகத்தினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டு , மிக விரைவில் சுவிஸ் பயணத்துக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவரின் மனைவி, இரு மகள்கள், மற்றும் சகோதரன் உள்ளிட்டவர்களை இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சுவிஸ் அரசின் செலவுடன் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் பொலிஸாருக்கு முறையிடப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சுவிஸ் பொலிஸார், குறித்த இலங்கையரை சுட்டுக்கொன்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 27 செப்டம்பர், 2017

தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் காப்பாற்றினார்



சுவிட்சர்லாந்து நாட்டில் தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Wattenwil நகரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் 
வசித்து வருகிறார்.
சில கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாடசாலைக்கு தினமும் சைக்கிளில் சென்று வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கம்போல் பாடசாலைக்கு சென்றுவிட்டு தனியாக சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது, சாலையில் நடந்து வந்த நபர் ஒருவர் திடீரென சிறுமி மீது பாய்ந்து கீழே தள்ளியுள்ளார்.
பின்னர், சிறுமியை கற்பழிக்கும் நோக்கில் அருகில் உள்ள அடர்ந்த காட்டிற்கு இழுத்து செல்ல முயன்றுள்ளார்.நபரின் தாக்குதலை எதிர்க்கொள்ள முடியாமல் சிறுமி உதவிக்கு அலறியுள்ளார்.அப்போது, காரில் வந்த பெண் ஒருவர் சிறுமியின் அலறலை கேட்டு காரை 
நிறுத்தியுள்ளார்.
பின்னர், காரை விட்டு இறங்கிய அவர் விரைவாக சென்று சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை எதிர்த்து சண்டையிட்டுள்ளார்.நிலைமையை உணர்ந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக பெண் பொலிசாரிடம் புகார் அளித்தபோது, ‘சிறுமியை கற்பழிக்க முயன்ற நபர் எனக்கு பரிச்சயமானவர்.
இங்கு வசித்து வரும் பாதிரியார் ஒருவரின் மகன் தான் அந்த தாக்குதல்தாரி’ என புகார் அளித்துள்ளார்.பெண்ணின் புகாரை பெற்ற பொலிசார் 56 வயதான நபரை கைது செய்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

சுவிற்சர்லாந்தின் பேர்ன் பெருநகர் ஈழமாக மாறியது

பொன்னார் மேனியன் புலித்தோலை அரைக்கிசைத்த பெருமான் பொன்நகர் 
சுவிஸ்  பேர்ன் பெருநகர் தமிழ்  ஈழமாக காட்சி அளித்தது
பேர்னில் சுவிற்சர்லாந்தில் அருட்பேரரசி ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரனாக செந்தமிழ்த்திருமறை கருவறையில் ஒலிக்க திருக்கோபுரத்தில் நால்வர் பெருமக்கள் எழுந்துநிற்க
 அருளாட்சி புரிகிறான்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் பெருநகரில் சைவமும் தமிழும் சிறந்து விளங்க ஞானலிங்கேச்சுரர் பெருங்கருணை புரிந்து ஐரோப்பாத்திடலில் நாளும் தமிழ் ஒலிக்க அருள்செய்துளான்பொற்றடை ஆண்டுத் திருவிழா பெருவிழாவாக 17. 08. 2017 வியாழக்கிழமை முதல் 29. 08. 2017 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்று வருகிறது.
26. 08. 2017 சனிக்கிழமை தேர்த்திருவிழா பெரும் சைவப்பெருவிழாவாக நடைபெற்றது. ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட அடியார்கூட்டம் பெரும்திரளாக ஒன்றுகூடிய பெருநிகழ்வாக நடைபெற்றது.
பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் (Haus der Religionen) பிரதிநிதிகள், பல்சமயத் தலைவர்கள் ஒன்றுகூடி வருகை அளித்து, ஞானலிங்கேச்சுர் தேர்த்திருவிழா சிறக்க தம் வாழ்த்துக்களை நவின்று சென்றனர். றெகுலா அவர்கள் தனது உரையில் இக்கோவில் அடிக்கல் நாட்டியது முதல் இன்று விழாக்காணும் 
காலம்வரை நான் தமிழ்மக்களையும் அவர்களது பக்தியையும் அறிவேன். நேரில் கண்டு வியந்திருந்கிறேன். நீங்கள் சைவநெறிக்கூடத்தின் திருக்கோவில் ஊடாக பல்சமயத்தில் உறுப்பினாராக விளங்குவதும் எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என வாழ்த்தினார்.
பேர்ன் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தில் இருந்து திருநிறை. அன்ரன் மற்றும் திருநிறை வின்சன் அவர்கள் வருகையளித்து நிகழ்வைச் சிறப்பித்தனர். சைவநெறிக்கூடத்தின் கொள்கை சமயம் தாண்டி தமிழர்கள் நாம் ஒரு வலிமையான இனமாக விளங்கவேண்டும் 
என்பதாகும்.
வருகை அளித்த விருந்தினர்கள் யாவருக்கும் சிறப்பு மதிப்பளிப்பு நடைபெற்றது.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திருமதி. றெகுலா மேடர் மற்றும் பழைய தலைவி காலநிதி. திருமதி கேர்டா கவுக் ஆகியோர் 
வருகையளித்திருந்தனர்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கழகத்தின் அதிகாரி திரு. பெல்லெர் அவர்களும் வருகை அளித்து விழாவைச் சிறப்பித்துப் பேசினார். தமிழர்கள் தமது பாரம்பரியத்தைப் பேணுவதற்கு தனக்கு வாய்ப்புக்கிடைப்பது மகிழ்ச்சி எனத் தன் 
உரையில் தெரிவித்தார்.

பலபத்து அடியார்கள்கூடி வேல் குத்திக் காவடி எடுத்தனர். சிறுவர்கள், பாலர்கள், இளவயதினர், காவடி எடுத்து ஆடிவந்த காட்சி இது சுவிசா ஈழமா என வியக்க வைத்தது
பல பெண் அடியார்கள் தீச்சட்டி சுமந்து வந்து தம் வேண்டுதலை நிறைவுசெய்தனர்.
இந்த ஆண்டும் மூன்று தேர்கள் திருவலம் வந்தன. முதற்தேரில் கரிமுகக்கடவுள் பிள்ளையாரும், முருக்கப்பெருமானும், திருமால் எழுந்திருக்க, ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் நடுநாயகமாக எழுந்தகாட்சி கையிலை இங்கு வந்ததாக 
அமைந்தது.
உலகப்பொது மறை அளித்த திருவள்ளுவர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இளம் சிறார்கள் திருக்குறள் ஓதி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருவள்ளுவரும் சிறப்புத் தேரில் எழுந்து உலா வந்தது, சைவமும் தமிழும் இரண்டல்ல ஒன்றென விளக்கியதாக அமைந்தது.
தமிழ் உலகின் முதன்மைத் தமிழ் ஊடகங்கள் செய்தியினை நேரடி அஞ்சலும் பதிவு செய்தன. சைவநெறிக்கூடத்தின் சார்ப்பில் யாவருக்கும் நன்றி நவிலப்பட்டது. மேலும் தமழ் ஊடகங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்களும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால்
 பகரப்பட்டது.
ஐரோப்பாத்திடல் முழுவதும் தமிழ் மணம் நிறைந்தது, பல தமிழ் அங்காடிகள் திருவிழாச் சூழலை மனதில் பதிய வைத்தது.
கோவில்கள் வெறும் சடங்குகளுடன் நின்றுவிடாமல் தம் பணியை இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு காக்கும் கருவிகாளாக விளங்கவேண்டும் எனும் சைவநெறிக்கூடத்தின் நோக்கம் ஒழுகுவதாக நிகழ்வுகள்
 அமைந்தன.
காலை 06.00 மணிக்கு தொடங்கிய வழிபாடுகளைத் தொடர்ந்து 12.30 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு, 13.30 மணிக்கு அருளமுது அறுசுவை விருந்தாக அளிக்கப்பட்டது. தேர் முன்றலில் முத்தமிழ் நிகழ்வுகள் 
நடைபெற்றன.
தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டால் மட்டுமே வாழ்வு உண்டெனத் தேர்த்திருவிழா அடையாளமாக விளக்குவதாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் விளக்கினார்.
ஊர்கூடி இழுத்தால் வாசல் வந்து தேர் சேரும், இன்று நாம் திருவாசல் வந்து அடைந்துள்ளோம், ஆனால் இன்னும் வாசல் வந்து சேரவேண்டிய தேர்கள் பல உண்டு, நாம் தமிழர்கள் ஒன்றாக இத்தேரை இழுத்து திருவாசல் சேர்க்க வேண்டும் என விளக்கினார்.
ஒருநாள் தமிழர்கள் தேர் திருவாசல் வரும் எனும் நம்பிக்கையுடன் ஞானலிங்கேச்சுரர் திருத்தேர் விழா நிறைவுற்றது.00:50 28.08.2017ஈழமாக மாறிய சுவிஸ்!!!!!”
பொன்னார் மேனியன் புலித்தோலை அரைக்கிசைத்த பெருமான் பொன்நகர் பேர்னில் சுவிற்சர்லாந்தில் அருட்பேரரசி ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரனாக செந்தமிழ்த்திருமறை கருவறையில் ஒலிக்க திருக்கோபுரத்தில் நால்வர் பெருமக்கள் எழுந்துநிற்க 
அருளாட்சி புரிகிறான்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் பெருநகரில் சைவமும் தமிழும் சிறந்து விளங்க ஞானலிங்கேச்சுரர் பெருங்கருணை புரிந்து ஐரோப்பாத்திடலில் நாளும் தமிழ் ஒலிக்க அருள்செய்துளான்பொற்றடை ஆண்டுத் திருவிழா பெருவிழாவாக 17. 08. 2017 வியாழக்கிழமை முதல் 29. 08. 2017 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்று வருகிறது.
26. 08. 2017 சனிக்கிழமை தேர்த்திருவிழா பெரும் சைவப்பெருவிழாவாக நடைபெற்றது. ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட அடியார்கூட்டம் பெரும்திரளாக ஒன்றுகூடிய பெருநிகழ்வாக நடைபெற்றது.
பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் (Haus der Religionen) பிரதிநிதிகள், பல்சமயத் தலைவர்கள் ஒன்றுகூடி வருகை அளித்து, ஞானலிங்கேச்சுர் தேர்த்திருவிழா சிறக்க தம் வாழ்த்துக்களை நவின்று சென்றனர். றெகுலா அவர்கள் தனது 
உரையில் இக்கோவில் அடிக்கல் நாட்டியது முதல் இன்று விழாக்காணும் காலம்வரை நான் தமிழ்மக்களையும் அவர்களது பக்தியையும் அறிவேன். நேரில் கண்டு வியந்திருந்கிறேன். நீங்கள் சைவநெறிக்கூடத்தின் திருக்கோவில் ஊடாக பல்சமயத்தில் உறுப்பினாராக விளங்குவதும் எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என வாழ்த்தினார்.
பேர்ன் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தில் இருந்து திருநிறை. அன்ரன் மற்றும் திருநிறை வின்சன் அவர்கள் வருகையளித்து நிகழ்வைச் சிறப்பித்தனர். சைவநெறிக்கூடத்தின் கொள்கை சமயம் தாண்டி தமிழர்கள் நாம் ஒரு வலிமையான இனமாக விளங்கவேண்டும் 
என்பதாகும்.
வருகை அளித்த விருந்தினர்கள் யாவருக்கும் சிறப்பு மதிப்பளிப்பு நடைபெற்றது.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திருமதி. றெகுலா மேடர் மற்றும் பழைய தலைவி காலநிதி. திருமதி கேர்டா கவுக் ஆகியோர் வருகையளித்திருந்தனர்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கழகத்தின் அதிகாரி திரு. பெல்லெர் அவர்களும் வருகை அளித்து விழாவைச் சிறப்பித்துப் பேசினார். தமிழர்கள் தமது பாரம்பரியத்தைப் பேணுவதற்கு தனக்கு வாய்ப்புக்கிடைப்பது மகிழ்ச்சி எனத் தன் உரையில் தெரிவித்தார்.
பலபத்து அடியார்கள்கூடி வேல் குத்திக் காவடி எடுத்தனர். சிறுவர்கள், பாலர்கள், இளவயதினர், காவடி எடுத்து ஆடிவந்த காட்சி இது சுவிசா ஈழமா என வியக்க வைத்தது
பல பெண் அடியார்கள் தீச்சட்டி சுமந்து வந்து தம் 
வேண்டுதலை நிறைவுசெய்தனர்.
இந்த ஆண்டும் மூன்று தேர்கள் திருவலம் வந்தன. முதற்தேரில் கரிமுகக்கடவுள் பிள்ளையாரும், முருக்கப்பெருமானும், திருமால் எழுந்திருக்க, ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் நடுநாயகமாக எழுந்தகாட்சி கையிலை இங்கு 
வந்ததாக அமைந்தது.
உலகப்பொது மறை அளித்த திருவள்ளுவர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இளம் சிறார்கள் திருக்குறள் ஓதி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருவள்ளுவரும் சிறப்புத் தேரில் எழுந்து உலா வந்தது, சைவமும் தமிழும் இரண்டல்ல ஒன்றென 
விளக்கியதாக அமைந்தது.
தமிழ் உலகின் முதன்மைத் தமிழ் ஊடகங்கள் செய்தியினை நேரடி அஞ்சலும் பதிவு செய்தன. சைவநெறிக்கூடத்தின் சார்ப்பில் யாவருக்கும் நன்றி நவிலப்பட்டது. மேலும் தமழ் ஊடகங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்களும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால் பகரப்பட்டது.
ஐரோப்பாத்திடல் முழுவதும் தமிழ் மணம் நிறைந்தது, பல தமிழ் அங்காடிகள் திருவிழாச் சூழலை மனதில் பதிய வைத்தது.
கோவில்கள் வெறும் சடங்குகளுடன் நின்றுவிடாமல் தம் பணியை இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு காக்கும் கருவிகாளாக விளங்கவேண்டும் எனும் சைவநெறிக்கூடத்தின் நோக்கம் ஒழுகுவதாக 
 நிகழ்வுகள் அமைந்தன.
காலை 06.00 மணிக்கு தொடங்கிய வழிபாடுகளைத் தொடர்ந்து 12.30 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு, 13.30 மணிக்கு அருளமுது அறுசுவை விருந்தாக அளிக்கப்பட்டது. தேர் முன்றலில் முத்தமிழ் நிகழ்வுகள்
 நடைபெற்றன.
தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டால் மட்டுமே வாழ்வு உண்டெனத் தேர்த்திருவிழா அடையாளமாக விளக்குவதாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் விளக்கினார்.
ஊர்கூடி இழுத்தால்  தேர்  வாசல் வந்து  சேரும், இன்று நாம் திருவாசல் வந்து அடைந்துள்ளோம், ஆனால் இன்னும் வாசல் வந்து சேரவேண்டிய தேர்கள் பல உண்டு, நாம் தமிழர்கள் ஒன்றாக இத்தேரை இழுத்து திருவாசல் சேர்க்க வேண்டும் என விளக்கினார்.
ஒருநாள் தமிழர்கள் தேர் திருவாசல் வரும் எனும் நம்பிக்கையுடன் ஞானலிங்கேச்சுரர் திருத்தேர் விழா 
நிறைவுற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம்சய்தி >>>






புதன், 9 ஆகஸ்ட், 2017

தமிழ் இளைஞன் ஒருவர் சுவிஸில் சுவிஸ் பிரஜை கத்தியால் குத்தி படுகொலை

சுவிஸ் நாட்டில் St-Gall மாநிலத்தில் வசித்த 22 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் சுவிஸ் பிரஜை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது St-Gall மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வெள்ளிகிழமை (04-08-2017) அன்று, St-Gall மாநிலத்தில் சன நடமாட்டம் உள்ள நகர் பகுதியில் (St gallen City, Market platz ) ஒரு உணவகத்தின் மத்தியில் அமைந்துள்ள தோட்டப் பகுதியில் இக் கத்திக்குத்துச் சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.
கழுத்தில் ஆழமாக கத்திக்குத்து நடந்ததால், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டு, தீவிர சிகிச்சையின் பலனளிக்காததால் நேற்று 08-08-2017 செய்வாய்கிழமை அன்று மரணமடைந்துள்ளார்.
கத்தியால் குத்தியவர் 42வயதுடைய சுவிஸ் பிரஜை எனவும், அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாகவும் செங்களான் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது இதுவரை தெரியவில்லை
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.