சனி, 21 ஜூலை, 2018

சைவ ஆதீன குருமுதல்வர்கள் சுவிஸ் ஆலயங்களுக்கு வருகை

செங்காலன் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், வின்ரர்தூர் ஓம் காரனந்தா ஆச்சிரமம், சூரிச் அருள்மிகு சிவன் ஆலயம், கூர் அருள்மிகு நவசத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றிக்கு அவர்கள் தல யாத்திரை மேற்கொண்டுள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து சூரிச் அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய கும்பாபிசேக மண்டலாபிசேக பூர்த்தி நிகழ்விலும், டூர்ன்ரன் கின்வில் அருள்மிகு ஶ்ரீ விஸ்ணு துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்ற வைபவத்திலும் ஆதீன முதல்வர்கள் கலந்து ஆசிகள் வழங்கி 
சிறப்பித்துள்ளார்கள்.
பாரிஸில் நடைபெறவுள்ள தமிழ்முறை திருமணத்தில் ஆசி வழங்குவதற்காக ஐரோப்பாவிற்கு வருகை தந்திருந்த ஆதீன குருமுதல்வர்களை சுவிஸ் நாட்டிற்கு வருமாறு செங்காலன் கதிர்வேலாயுத சுவாமி ஆலய தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று ஆதீன குருமுதல்வர்கள் சுவிசிற்கு வருகை தந்தமை 
குறிப்பிடத்தக்கது.,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.