ஞாயிறு, 1 ஜூலை, 2018

பேர்ண் ஞான லிங்கேஸ்வர ஆலயத்தில் பண்டிதர் திரு ச.வே பஞ்சாட்சரம் அவர்களின் நூல்வெளியீடு

யாழ் இணுவிலை பிறப்பிடமாகவும் கனடாவை விதிவிடமாகக்கொண்ட பண்டிதர்  திரு.ச.வே பஞ்சாட்சரம் அவர்கள் எழுதிய 111வது நூல்வெளியீட்டு விழா சுவிஸ் பேர்ண் ஞான லிங்கேஸ்வர ஆலயத்தில் 30.06.2018 அன்று  தமிழ் மொழியின் சிறப்பு, விரிசடைக்கடவுளே எம் மொழிக்கு கழகம் கண்டார் என்பதாகும். கடவுள் மறுப்பால் புராணத்தை
மறுதலித்தாலும் தமிழர்களிடையில் இன்றுவரை நிலவும் இந் நம்பிக்கை உலகில் பிற எந்த மொழிக்கும் இல்லை. ஆகவே நாம் தெய்வத் தமிழ் என்று போற்றுவது மிகப்பொருத்தமாகும்.
என்றுயாழ் இணுவிலை பிறப்பிடமாகவும் கனடாவை விதிவிடமாகக்கொண்டதிரு பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம் அவர்கள் எழுதிய நூல்வெளியீடு 30.06.2018 அன்று ம் இளமையுடன் எம் மொழி ஒளிரப் பலரது தமிழ்ப்பணிகள் காரணமாகும். தாய்த் தமிழகத்துடன் ஒப்பிட்டால் ஈழத்தமிழர்களது ஆட்தொகையும் படைப்புக்களின் தொகையும் குறைவானதாக இருக்கலாம்.
ஆனால் சங்க காலம் தொட்டு இன்றுவரை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் சிறந்த நற்படைப்புக்களைத் தமிழ் உலிகிற்குப் படைத்தளித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு சிறந்த இலக்கியம் எனப்பது மொழியின் முதுசம் மட்டுமல்ல, அது இனத்தின் மற்றும் அந் நாட்டின் வரலாறும் கூட! இலக்கியம் என்பது மகிழ்வூட்டல் என்ற வகையில் மட்டுமே அமைந்துவிடாது, மானிட வாழ்வியலை செம்மைப் படுத்துவதாகவும் 
அமைந்திருக்க வேண்டும்
இத்தகைய எமது இலக்கியங்களைப் பேணிப் பாதுகாப்பது மட்டுமன்றி, புதிய பல இலக்கியங்களும் படைக்கப்பட வேண்டும். இதற்கு படைப்பாளிகளை ஊக்குவிக்கபது இன்றியமையாததாகும்.
இவ்வகையில் முத்தமிழ் அறிஞரான பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்கள் எழுதியுள்ள ‚திறந்த வெளிச் சிறையில் ஒரு
 தேசம்‘ எனும் நூல்
சைவநெறிக்கூடுத்தின் ஏற்பாட்டில் தமிழர் களறியால் 30. 06. 2018 சனிக்கிழமை மாலை 17.30 மணிக்கு சுவிற்சர்லாந்து நாட்டில் பேர்ன் நகரில் சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அமைந்திருக்கும் இடத்தில், தமிழர் களறி மண்டபத்தில் இடம் 
மிகு சிறப்பாக நடைபெற்றது.
திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் திருவளர். செல்வன் சண்முகலிங்கம் சபீன் அவர்கள் கடவுள் வாழ்த்துப் பாடினர்.
மங்கல விளக்கினை வருகை அளித்திருந்தி சிறப்பு விருந்தினர்கள் திருநிறை மகாலிங்கம் ஐயா (நலிவடைந்தோர் நலவாழ்வு சங்கம், சுவிற்சர்லாந்து), திருநிறை. பார்தீபன் (தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து), 
திருநிறை. சின்னத்துரை
லக்ஸ்மன் (பேர்ன் தமிழ்ப்பள்ளி இணைப்பாளர்), திருநிறை. வினாசித்தம்பி தில்லையம்பலம் (சிவஞான சித்தர்பீட நிறுவனர்களில் ஒருவர்), திருமதி. நந்தினி (கல்விச்சேவை பேர்ன் தமிழ்ப்பள்ளி ஆசிரியை) ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
நிகழ்வுகளை திருமதி. முரளிதரன் கார்த்திகா தொகுத்தளித்தார். மங்கல விளக்கேற்றலை அடுத்து நினைவுவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.
வரவேற்புரையினை திருவளர். சபீன் சண்முகலிங்கம் ஆற்றியிருந்தார். இவர் ச.வே அவர்களின் இலக்கணப்பூங்கா நூலின் பயனைத் தான் பெற்றதுடன், சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து இன்று தமிழாசிரியராகத் தான் ஆற்றும் பணிக்கும் பண்டிதர் ஐயாவின் நூல் பயன்படுவதை தனது
 வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
ஆசியுரையினை திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் வழங்கினார். பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைச் சுருக்கி உரையாக ஆற்றிய ஐயா அவர்கள், இனமான உணர்வும், தமிழ் மொழிமீது பற்றும், சைவசமய நம்பிக்கையும் கொண்டு இன்றுவரை இவர் தமிழ் உலகிற்கு ஆற்றும் தமிழ்ப்பணியின் சிறப்பினை எடுத்து உரைத்தார்.
பண்டிதர் திரு ச.வே பஞ்சாட்சரம் அவர்களுக்கு என்களதும் இந்த இணையங்களின் நல்வாழ்த்துக்கல் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.