புதன், 4 ஜூலை, 2018

சுவிஸ் சூரிச்சில் பேருந்து பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்

சுவிஸ் சூரிச் நகரில் பயணச்சீட்டு இன்றி பேருந்தில் பயணம் செய்த இளைஞரை டிக்கெட் பரிசோதகர் மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 6 இளைஞர்கள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 01.07.2018.ஞாயிறு அன்று சூரிச் நகர பேருந்து ஒன்றில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில்
 ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது பயணிகளில் ஒருவர் டிக்கெட் இன்றி பயணம் செய்வது தெரியவந்தது. மட்டுமின்றி குறித்த பேருந்து நிறுவன ஊழியர்கள் 5 பேரும் டிக்கெட் வைத்திருக்கவில்லை.
இதனையடுத்து Wipkingen ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் குறித்த 6 பேரையும் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து நிறுவன ஊழியர்களும் அந்த இளைஞரும் குறித்த டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் டிக்கெட் பரிசோதகர் அவர்களை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார் பரிசோதகர் உள்ளிட்ட 
7 பேரையும் கைது செய்தனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.