புதன், 11 செப்டம்பர், 2013

சுற்றுச்சூழல் பிரசாரகருக்கு கொலை மிரட்டல்


 சுவிஸில் சுற்றுச்சூழல் பிரசாரம் செய்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பிரான்ஸ் வெபர், சுற்றுச்சூழல் பிரசார வேலையில் ஈடுபட்டு வருபவர்.
இந்நிலையில் இவருக்கு தபாலின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் உனது சட்டத்தரணி மற்றும் மகள் சாகவேண்டும், அவர்களுக்கான இறுதிநாள் நெருங்கிவிட்டது, அந்த காலமானது 18 முதல் 24 மாதங்களே ஆகும் என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதமானது ஆகஸ்ட் 12ம் திகதி எழுதப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெபர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.