திங்கள், 2 செப்டம்பர், 2013

தீர்வு சுவிஸில் ரயில்வே விபத்துக்கு


சுவிட்சர்லாந்தில் ஏற்படும் ரயில் விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் சுவிஸில் நடைபெற்ற கோர ரயில் விபத்தால் 20 பயணிகள் படுகாயமடைந்தனர், ஒட்டுனர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 1700 ரயில்வே சிக்னல்களின் வேகத்தை கண்காணிப்பதற்காக உபகரணங்களை நிறுவுவதற்கான திட்டங்களை பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் ரயில்களில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளால் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் வெளிவந்த நிலையில் உள்ளன.
இது குறித்து கூட்டாட்சி ரயில்வே தலைவர் ஆன்ட்ரியாஸ் மேயர்(Andreas Meyer) கூறுகையில், ரயில்வே விபத்துக்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் ரயில்களின் தொழில்நுட்ப பிரச்சனைகள் குறித்து பரிசோதித்து கொண்டுதான் இருக்கிறோம்.
மேலும் இந்த குற்றச்சாட்டுகள் உண்மையென்ற பட்சத்தில் நாங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.