சனி, 7 செப்டம்பர், 2013

மூத்த குடிமகனைபெண்ணின் ஆடையை அணியுமாறு!!


இன அடிப்படையில் மூத்த குடிமகன் ஒருவரை Appenzell Ausserhoden உள்ள மருத்துவமனையில் அவமானப்படுத்திய குற்றத்திற்காக நான்கு செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த மூத்த குடிமகன் ஒருவரை அங்கு பணி புரியும் நான்கு செவிலியர்கள் சேர்ந்து பெண்ணின் ஆடையை கொடுத்து அணிய சொல்லி கட்டயாப்படுத்தியுள்ளனர்.

மேலும் தகாத வார்த்தைகளால் பேசியும் கிண்டல் செய்தும் அசிங்கப்படுத்தியுள்ளனர். இதில் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட நபர் பொலிசல் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் மருத்துவமனையில் பணிபுரிந்த நான்கு பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் ஒரு செவிலியர் அவரை 30 முதல் 45 நிமிடம் வரை கிண்டல் செய்து பேசியதாகவும் கூறப்படுகின்றது.

பெண்ணின் ஆடையை அணிய சொன்ன நான்கு பேரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் மற்றும் உள்ள ஒருவர் அவகாச காலம் வரை பணிசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செவிலியர்களை பணி நீக்கம் செய்வதுடன் தண்டனை வழங்கவேண்டுமென பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.