செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விடுதலையான சிறைக்கைதி மர்மமான முறையில்!


சுவிட்சர்லாந்தில் சிறையில் இருந்து தப்பிச் சென்று உயிரிழந்த கைதியின் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சுவிஸில் அந்தமாட்டன் (39) என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 2011ம் ஆண்டு ஜெனிவா சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரான்சை பிறப்பிடமாக கொண்ட இவர் 2001ம் ஆண்டு ஜெனிவாவிற்கு குடிபெயர்ந்து வந்துள்ளார்.

பின்பு பாலியல் செயல்களில் ஈடுபட்ட வந்த இவர் கடைசியாக 2011ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் தண்டனை காலங்கள் முடிந்து சைகோதெரப்பிஸ்ட் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளிவந்த இவர் மர்மமான முறையில் ஜேர்மனின் எல்லைப்பகுதியான அதாவது சுவிட்சர்லாந்துக்கு அருகில் இறந்து கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.