சனி, 6 டிசம்பர், 2014

பாலியல் தொழிலாளி அடித்துக் கொலை

 சுவிசில் ஆஸ்திரிய பாலியல் தொழிலாளி ஒருவரை அடித்து, கொலை செய்த சுவிஸ் நபருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிசின் Langenthal என்ற நகரில் கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி, 2012ம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
மிக கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில், 28 வயது மதிக்கத்தக்க சுவிஸ் நபர் மீது சந்தேகம் எழுந்தது.
குறித்த நபர் பெண்ணிடம் இருந்த பணத்தை கொள்ளை அடித்ததுடன், கடுமையாக தாக்கி சென்றுள்ளது தெரியவந்தது.
மேலும் கொலை செய்வதற்கு தான் கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தியதாகவும், தன்னால் தாக்குதலை நிறுத்த முடியவில்லை என்றும், இது ஒரு திரைப்படம் போல இருந்தது எனவும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.