சனி, 23 ஜனவரி, 2016

இலங்கைப் பிரதமர் சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியை சந்தித்தர் ?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதி ஸ்னைடர் அம்மேனை (Schneider Ammann) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு டவோஸ் நகரில் உள்ள சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியின் சொந்த வீட்டில் இன்று இடம்பெற்றுள்ளது. 
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  
2016ம் ஆண்டுக்கான உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 19ம் திகதி சுவிட்ஸர்லாந்துக்கு பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.