செவ்வாய், 5 ஜனவரி, 2016

சுவிக்கு சிகிச்சை பெற வந்த மன்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டது !

கத்தார் நாட்டின் முன் நாள் மன்னரான ஆமீரானா, தனது பரிவாரங்களோடு சுவிஸ் நாட்டுக்குள் 9 விமானங்களில் சென்றுள்ளார். இவர் மொராக்கோ நாட்டிற்கு சுற்றுலா சென்றவேளை அங்கே காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சுவிஸ் நாட்டில் உள்ள சூரிச் விமான நிலையத்திற்கு செல்ல , உடனடியாக அனுமதி கோரப்பட்டது. இரவு 
நேரங்களில்
சூரிச் நகர் மீது விமானங்கள் பறக்க தடை உள்ளது. இன் நிலையில் அவசர சிகிச்சைக்காக ஒரு விமானத்தில் அவர் வருவார் என்று எதிர் பார்த்தால் , ஒன்றன் பின் ஒன்றாக 9 விமானங்கள் சுவிஸ் சூரிச் நகரை
 நெருங்கியுள்ளது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் குழம்பிப்போய் உள்ளார்கள். 
அதுபோக அத்தனை விமானங்களையும் இறக்க ஏதுவான , வசதிகள் கூட செய்யப்படாத நிலையில் , இந்த 9 விமானங்களும் தரையிறங்க 
முற்பட்டுள்ளது.
முதலில் 3 விமானத்தையே அதிகாரிகள் தரையிறங்க அனுமதித்துள்ளார்கள். சூரிச் நகரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் முன் நாள் மன்னர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இரவு நேரத்தில் 
விமனாத்தை கொண்டுவந்து பெரும் இரைச்சலை ஏற்படுத்தியது. மற்றும் விமான நிலைய 
அதிகாரிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது என்று காரணங்களைக் காட்டி , 13,000 பிராங்குகளை அபராதமாக விதித்துள்ளார்கள், சுவிஸ் அதிகாரிகள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.