திங்கள், 16 ஜனவரி, 2017

இளம்பெண் ஒருவருக்கு சுவிசில் இழைக்கப்பட்ட அநீதி!

Nancy Holten என்னும் பெண் வேறு நாட்டில் பிறந்திருந்தாலும், தன் எட்டு வயது முதல் சுவிற்சர்லாந்தில் தான் வசித்து வந்தார்.
அவர் மீது எந்தவொரு குற்ற பதிவோ அல்லது தவறுகளோ இதுவரை இருந்ததில்லை. ஆனாலும் அவருக்கு சுவிற்சர்லாந்து பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம் தெரியுமா? சுவிஸ்ஸில் அதிலும் முக்கியமாக வடக்கு சுவிற்சர்லாந்தில் குதிரை பந்தயம் நடத்தும் பழக்கம் உள்ளது. மேலும் அங்கு ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி உணவுகளை எல்லோரும் சாப்பிடும் Sunday roast என்னும் கலாசாரம் உள்ளது.
இயற்கையிலேயே சைவம் பிரியரும், விலங்குகளை வதம் செய்வதை விரும்பாதவருமான Nancy இதை எதிர்த்து சிலருடன் சேர்த்து பல முறை போராட்டம் நடத்தியுள்ளார்.
அவர்களை கலாச்சாரத்தை Nancy எதிர்க்கிறார் என கரம் வைத்து அந்நாட்டின் மாநகராட்சி ஊழியர்கள் இவருக்கு பாஸ்போர்ட் வழங்காமல் அலைகழிக்கின்றனர்.
இது குறித்து Nancy கூறுகையில், நான் எந்த தவறும் செய்யவில்லை. என் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை இரு முறை அவர்கள் நிராகரித்து விட்டார்கள்.
நான் என்னவோ குற்றவாளி போல என்னை அவர்கள் நடத்துகிறார்கள்.
இது ஜனாநாயகத்தின் மேலே கேள்விகுறியை ஏற்படுத்துகிறது , நான் இது பற்றி மண்டல அரசிடம் முறையிட்டுள்ளதாக 
கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.