திங்கள், 10 ஆகஸ்ட், 2015

வங்கி கொள்ளை: கொள்ளையனை வலை வீசித் தேடும் பொலிசார்

சுவிட்சர்லாந்தின் Aesch பகுதியில் அமைந்திருக்கும் தேசிய வங்கியில்தான் இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.
Aesch பகுதியில் அமைந்திருக்கும் தேசிய வங்கியில் சம்பவத்தன்று காலையில் கருப்பு உடையணிந்த ஒருவர் வங்கியில் நுழைந்து அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த அவன் அங்கிருந்த மொத்த பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள் Basel பகுதி பொலிசாருக்கு தெரிவித்தனர்.
கருப்பு நிறத்தில் தோள்பை வைத்திருந்ததாக கூறப்படும் அந்த கொள்ளையனிடம் ஆயுதங்கள் எதுவும் இருந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து Basel பகுதி பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த கொள்ளையன் குறித்த விவரங்கள் தெரிய வந்தால் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.