செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

சுவிஸ் வித்தியசமாக வீடியோ படப்பிடிப்பு விபரீதத்தில் முடிந்த காணொளி

சுவிட்சர்லாந்து நாட்டில் மற்றவர்களை கவரும் வகையில் வித்தியசமாக வீடியோ எடுக்க எண்ணிய 14 முதியவர்கள் ஈடுபட்ட செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது.

சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Arosa என்ற பகுதி சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற இடமாகும்.

இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வினோதமான ஒரு விளையாட்டில் ஈடுபட்டு உற்சாகம் அடைவார்கள்.

இந்த இடத்திற்கு அண்மையில் வந்த 14 முதியவர்கள் வித்தியாசமான வீடியோ ஒன்றை எடுத்துக்கொள்ள முடிவு செய்தனர்.

அதாவது, குழந்தைகள் பூங்காக்களில் விளையாடுவது போல் நீளமான மரக்கட்டை ஒன்றில் ஏறி நின்று ஊஞ்சல் போல் விளையாடி அதனை வீடியோ எடுத்துக்கொள்ள திட்டமிட்டனர்.

இதன்படி, நீளமான அந்த மரக்கட்டையின் ஒரு புறத்தில் சில முதியவர்கள் நின்றுக்கொள்ள, மறுபுறத்தில் நின்றுருக்கும் எஞ்சிய முதியவர்கள் நடக்க ஆரம்பத்தால், மற்றவர்கள் மேலே எழும்புவார்கள்.

இதுபோன்ற விளையாட்டில் ஒருமுறை செய்து வெற்றிக்கண்ட அவர்கள், மறுமுறை செய்தபோது தான் அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

மரக்கட்டையின் ஒருபுறம் கீழே இறங்கியபோது, மறுபுறத்தில் மேலே எழும்பிய முதியவர்களால் சரியாக மரக்கடை மீது நிற்கமுடியாமல் தடுமாறியுள்ளனர்.

அப்போது கடையாக நின்ற முதியவர் தள்ளாடியவாறு அருகில் உள்ளவர் மீது மோத, அதன் பிறகு வரிசையாக ஒவ்வொருவராக கீழே விழுந்துள்ளனர்.

இந்த விபத்தில் சுமார் 8 முதியவர்களுக்கு தலையிலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த Alpin Medic மீட்புக்குழுவினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வித்தியாசமாக வீடியோ எடுக்க முயன்ற முதியவர்களுக்கு இது அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாது வீடியோவாக அமைந்துவிட்டது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.