சுவிட்சர்லாந்தில் ஓடும் காரில் இருந்து நபர் ஒருவர் தள்ளிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Gubrist Tunnel என்ற சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் இருந்து திடீரெனெ 23 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தள்ளிவிடப்பட்டுள்ளார்.
கீழே விழுந்த அந்நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி வயிற்றுப்பகுதி, கால் போன்ற பகுதிகளிலும் காயம் ஏற்பட்டு ரத்தமயமாக கிடந்துள்ளார்.
அவரை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இதற்கிடையில் Kosovo மற்றும் Macedonia நாட்டை சேர்ந்த 2 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர், இவர்கள் இருவரும் தள்ளிவிடப்பட்ட நபருடன் பணியாற்றுபவர்கள் என
தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் தான் அந்நபரை காரில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்கள் என்று தெரியவந்தாலும், காயமுற்ற நபர் முறையாக வாக்குமூலம் அளிக்காத காரணத்தால் பொலிசார் குழப்பத்தில்
உள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக