வியாழன், 26 ஏப்ரல், 2018

சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடு சுவிட்சர்லாந்து

மூன்றாவது முறையாக Boston Consulting Group வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டின் European Railway Performance Index அறிக்கையின்படி சுவிட்சர்லாந்து ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடாகத் தொடர்ந்து விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்துக்கு 7.2 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்தின் பயணிகள் ரயில் சேவை, அதிகப் பயன்பாடு, சேவைத்தரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கை 
தெரிவிக்கிறது.
டென்மார்க்(6.8 புள்ளிகள்), பின்லாந்து(6.6 புள்ளிகள்) மற்றும் ஜேர்மனியை(6.1 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளிய சுவிட்சர்லாந்து முன்பு இருமுறை முதலிடத்தைப் பிடித்தது போலவே இம்முறையும் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
பட்டியலின் கடைசியில் இருப்பது பல்கேரியா(1.9 புள்ளிகள்).
எவ்வளவு பயணிகள் எவ்வளவு முறை ரயில் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கிட்டத்தட்ட முழு மதிப்பெண்கள் பெற்றாலும் தரத்தில் சற்றுக் கீழிறங்கியுள்ளது சுவிட்சர்லாந்து.
இந்த விடயத்தில் பின்லாந்தும் பிரான்ஸும் முந்திக்கொண்டன. இரண்டுமே 3.3க்கு இரண்டு புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து 1.8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.
பாதுகாப்பு விடயத்தில் டென்மார்க், லக்ஸம்பர்க், பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் சுவிட்சர்லாந்தைவிட சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளன.
இந்த நிலைக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள சுவிஸ் ரயில்வே இந்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பாடுபடும் என உறுதி எடுத்துக் கொள்வதாக
 தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 19 ஏப்ரல், 2018

இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயம்

7
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இலங்கையர்கள் பலர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பிற்பகல் 3.15க்கு  இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலாவுக்கு சென்ற இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று சுவிஸில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 சுற்றுலாப்பயணிகளை சென்ற இந்த பேருந்து, சூரிச்சின் வடக்குப்பகுதி அதிவேக வீதியில் வைத்து இரண்டு கனரக வாகனங்களுடன்
 மோதியுள்ளது
சம்பவத்தில் ஒருவர் கடுமையன காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 18 ஏப்ரல், 2018

ஈழ தமிழர் சுவிஸில் தேர்தலில் அமோக வெற்றி

சுவிட்ஸர்லாந்து தேர்தல் ஒன்றில் ஈழ தமிழர் ஒருவர் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக
 வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 15 ம் திகதி இடம்பெற்ற குறித்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அவர் இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140 இற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.
சோசலிசக் கட்சி சார்பில் குறித்த நகர சபைக்கு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி ஐந்தாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது 
குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 4 ஏப்ரல், 2018

சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் சுவிசில் பலி

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த
 ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் பனிச்சறுக்கு விளையாட்டின் போது பனிப்பாறைச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவர்களுடன் வந்த இருவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் Valais பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இன்னொரு பனிச்சறுக்கு குழுவினர் பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து பொலிசார் மீட்பு பணியில்
 ஈடுபட்டனர்.
பனிப்பாறைச் சரிவில் சிக்கிய ஐந்து பேரும் சமிக்ஞை கருவிகளை அணிந்திருந்ததால் மீட்பு குழுவினர் அவர்கள் இருக்கும் இடத்தை சற்று எளிதாக கண்டறிந்து இருவரை ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது.
என்றாலும் போதுமான வெளிச்சம் இல்லாததால் மூன்று பேரின் உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்கள் ஸ்பெயின் நாட்டவர்கள் என்பது மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய பொலிசார் அவர்களது தனிப்பட்ட அடையாளங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றின் காரணமாக பனிப்பாறைச் சரிவுகள் ஏற்படலாம் என்று Valais பொலிசார் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 22 மார்ச், 2018

வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசி உபயோகிப்பவர்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து வாலீஸ் (Wallis) மாகாணத்தில் வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசிகளை உபயோகிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வாலீஸ் மாகாண பொஸிஸார் அறிவித்துள்ளனர்.
வாகனம் செலுத்தும் போது கையடக்க தொலைபேசிகளை பாவிப்பதானது இனிவரும் நாட்களில் கடுமையான குற்றச் செயலாக கருதப்படும் (Criminal), அதேவேளை பொலிஸாரின் வழக்குப் பதிவைப் பொறுத்து தண்டப்பணம் 100 சுவிஸ் பிராங்குகளில் இருந்து அதிகரித்துச் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஓட்டுனர் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழப்பதோடு தண்டனையைப் பொறுத்து சிறைவாசம் அனுபவிக்க வேண்டிவரும் எனவும், பொஸிஸார் எச்சரித்துள்ளனர்.
கையடக்கதொலைபேசி பாவனையின் போது விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையும் குறைவதோடு, காப்புறுதி சலுகைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.
வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசியை பாவிப்பதன் மூலமே அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்கும் முகமாகவே அதிகபட்ச தண்டனைகளை வழங்க அதிரடி முடிவெடுத்துள்ளதாக பொலீஸார் மேலும்
 தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நடத்தப்பட்ட ஆய்வில் சுவிசில் புலம்பெயர்ந்த மாணவர்கள் அசத்தல்

பாரீஸில் அமைந்துள்ள Organisation for Economic Cooperation and Development (OECD) என்னும் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து பள்ளிகளில் பயிலும் புலம்பெயர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதாகத் தெரியவந்துள்ளது.
திங்களன்று வெளியான அந்த ஆய்வு குறிப்பாக புலம்பெயர்ந்த மாணவர்களின் கல்வித்தரம் குறித்த முந்தைய புள்ளி விவரங்களையும் தற்போதைய புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு நோக்கியது.
புலம்பெயர்ந்த மாணவர்கள் நன்றாகவே படிப்பதாகவும் அதிலும் 58%பேர் வாசித்தல், கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மாணவர்கள் உற்சாகமாகக் கற்கிறார்களா, மற்றும் பள்ளிச் சூழல் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 46%பேர் நேர்மறையான பதிலளித்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஐரோப்பிய மாணவர்களின் எண்ணிக்கையுடன் (66%)ஒப்பிடும்போது குறைவுதான் என்றாலும், சுவிட்சர்லாந்தில் பிறந்த மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது
 இது மிக அதிகமாகும்.
ஆனால் சுவிட்சர்லாந்தில் பிறந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த மாணவர்கள் இருவரின் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது உலகிலேயே சுவிட்சர்லாந்து மாணவர்கள்தான் கல்வியில் உற்சாகமாகப் பங்குபெறும் மாணவர்களாகிறார்கள்.
ஆனால் சுவிட்சர்லாந்தை சொந்த நாடுபோல் உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு 54%வெளிநாட்டு மாணவர்கள்தான் ஆம் என்று பதிலளித்துள்ளனர்.
பத்தாண்டுகளுக்குமுன் இதே கேள்வி கேட்கப்பட்டபோது, ஆம் என்று பதிலளித்தவர்களை விட இந்த எண்ணிக்கை 17 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 14 மார்ச், 2018

சுவிசில் இருந்து இலங்கையர்கள் சிலர் திருப்பி அனுபப்பட்டனர்

இலங்கை தமிழர்கள் சிலரை நேற்றைய தினம் திருப்பி அனுப்புவதற்கு சுவிஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20இற்கும் மேற்பட்டோர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 5 மணியளவில் விசேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த இலங்கைத் தமிழர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பரவலாக செய்திகள் வெளிவந்தபோதிலும், இந்த தகவல் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது
 குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.