வியாழன், 31 ஜூலை, 2014

ஆனந்த குளியல் போட சென்ற வாலிபருக்கு நேர்ந்த அவலம்

சுவிசில் நதியில் குளிக்க சென்ற நபர் ஒருவர் கனமான பாறை ஒன்றின் மீது மோதி பலத்த காயமடைந்துள்ளார்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள லிமட் என்னும் நதியில் கடந்த 26ம் திகதி வாலிபர் (27) ஒருவர் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது அவர் அருகே இருந்த பாலத்திலிருந்து நதியில் குதித்ததால் அங்குள்ள பாறை ஒன்றில் முட்டி மோதிக் கொண்டுள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
தற்போது உயிருக்கு போராடும் நிலையில் உள்ள அந்ந வாலிபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், நதியில் குளிப்பது என்பது சுலபமான விடயம் இல்லை என்றும் அதற்கு சில நுணகங்களை அறிந்து நாம் நீச்சலில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.