வியாழன், 31 ஜூலை, 2014

சுவிசின் யுக்தி நாய்களை பாதுகாக்க..

 சுவிசில் நடைபெறவுள்ள தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்கள் செல்லப்பிராணியாய் வளர்க்கும் நாய்களை அயல்நாட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிசின் பேசல் மாகாணத்தில் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரை தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளது.
விதவிதமான ருசிகர உணவு வகைகளுடனும், வானவெடிக்கைகளுடனும் களைகட்டவுள்ள இந்த தேசிய நாள் திருவிழாவில் சுமார் 1.5 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தரவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவிழாவில் வெடிக்கப்படும் வானவெடிக்கைகள் மற்றும் பட்டாசு சத்தங்களும் அங்குள்ள நாய்களை பாதிக்கும் என விலங்கியல் சங்கம் வலியுறுத்துகின்றது.
இதுகுறித்து விலங்கியல் சங்க தலைவர் கூறியதாவது, இந்த வெடி சத்தங்கள் நாய்களை பாதிக்கும் என்பதால் விழா நடைபெறும் ஒரு வாரத்திற்கு அவைகள் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்படும்.
மேலும் அங்குள்ள விலங்கியல் நலச்சங்கள் அவைகளை பாதுகாத்து உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
 
மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.