வியாழன், 31 ஜூலை, 2014

பகீர் தகவல் உணவு பொட்டலங்களில் நச்சு பொருட்களா?

பகீர் தகவல் உணவு பொட்டலங்களில் நச்சு பொருட்களா?

சுவிசில் பொட்டலங்களாய் கட்டப்படும் உணவு பொருட்களில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அபயாகரமான பொருட்கள் கலக்கப்படுவதாக அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள அரக்கட்டளை மற்றும் பொதியில் மன்றத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு குறித்து கூறியதாவது, இந்த உணவுப் பொருட்களுடன் கண்ணிற்கு புலப்படும் வகையிலேயே மொத்தம் 175 நச்சு பொருட்கள் கலக்கப்பட்டது தெரிந்துள்ளது.
மேலும் நமது கண்ணிற்கு தெரியாமல் சுமார் 6000 வகையான நச்சுபொருட்கள் இதில் கலந்திருக்கக்கூடும். இவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஏனெனில் உணவு நன்றாக இருக்க வேண்டும், ருசியும் நிறமும் மக்களை கவர வேண்டும் என்பதற்காக பல தரப்பட்ட இராசயனங்கள் உணவு பொட்டலங்களுடன் கலக்கப்படுகின்றன.
இந்நிலையில் நாளடைவில் இந்த உணவு பொட்டலங்கள் தங்களது காலவதியாகும் நேரத்தை நெருங்கும்போது, அவற்றை உட்கொள்ளும் மக்களுக்கு நீண்டகால நோய் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
எனவே மக்கள் உணவு பொட்டலங்களை தெரிவு செய்கையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.