புதன், 7 அக்டோபர், 2015

பாரளுமன்ற தேர்தலில் தர்சிகாவை ஆதரிக்கவேண்டும்***

எதிர் வரும் 18 திகதி நடைபெறவுள்ள சுவிஸர்லாந்து  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்து பெண்மணி திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களை ஆதரிக்குமாறு பேர்ண் மாநிலத்தின் வாழும் தமிழ் மக்களிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபையின் உறுப்பினர் ஏம் .கே சிவஜிலிங்கம் வேண்டுகோள்

 விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால்  பல லட்சத்திற்கு மேற்பட்ட எமது மக்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்  தாம் வாழும் நாடுகளில் பல துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தாலும் அரசியலில் குறிபிடத்தக்க வகையில்  இதுவரை எமது மக்கள் முன்னேற்றம் 

அடையவில்லை கனடா நாட்டில சி, ராதிகா பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளர் ஏனையவர்கள் நகராட்சி மன்றத்தில் அங்கம்வகிக்கின்றனர் எனவே இந்த முறை பாராளுமன்றத்தில் போட்டியிடும் தர்சிகாவை பேர்ண் வாழ் தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்

 நடைபெறவுள்ள தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் 2500 மேற்பாட்ட தமிழ் மக்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர் அவர்கள் இரண்டு  விருப்பு வாக்கு அளிக்கமுடியும் அனைவரும் ஒற்றுமையாக வாக்களித்தால் தர்சிகாவின் வெற்றி உறுதிசெய்யப்படும். எனவே தமிழ் மக்கள் அனைவரும் சுவிஸ்பாராளுமன்றத்தில

 தமிழ் குரல்  ஒலிக்க  எமது பிரச்சினைகளை சர்வதேச ரீதியாக உரிமையுடன் பேசவேண்டும் எனவே எதிர் கால பிள்ளைகளின் நலன் கருதி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவக்க பேர்ண் வாழ் அனைத்து தமிழ் மக்களும் வாக்குஅளிக்குமாறு உரிமையுடனும் அன்புடனும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.