புதன், 5 பிப்ரவரி, 2014

கொள்ளையர்களின் கைவரிசை: 1000 பிராங்குகள் அபேஸ்

 சுவிசில் துப்பாக்கி முனையில் நபர் ஒருவரை மிரட்டி வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் சூரிச் நகரத்தில் இருக்கும் டைடிக்கன் இரயில் நிலையத்தில் நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கி வைத்து தன்னிடம் இருக்கும் பொருட்களை தருமாறு அங்கிருந்த கொள்ளையன் ஒருவன் மிரட்டியுள்ளான்.
அப்போது அச்சம் கொண்ட அந்நபர் செய்வதறியாது தன்னிடம் இருந்த கைகடிகாரத்தையும், 1,000 பிராங்குகளையும் கொள்ளையனிடம் கொடுத்த போதிலும் அவனை துப்பாக்கியால் தலையில் தாக்கியதுடன், Square என்ற அடுத்த ரயில் நிறுத்ததிற்கு தன் கூட்டத்துடன் அக்கொள்ளையன் தப்பி ஓடினான் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் சிறிய காயங்களுடன் தவித்து கொண்டிருந்த அந்நபரை அவ்வழியே வந்த இருவர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இச்சம்பவத்திற்கான சாட்சிகளை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக சூரிச் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.