புதன், 19 பிப்ரவரி, 2014

ஜெனிவாவில் கடத்தப்பட்ட விமானம் தரையிறக்கம் (காணோளி )

ஜெனிவாவில் கடத்தப்பட்ட விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து ரோம் நோக்கி பயணித்த விமானம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானமானது எத்தியோப்பா விமான நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடத்தல்காரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் பயணித்த பணியாளர்களும், பயணிகளும் பாதுகாப்புடன் உள்ளதாக விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.