திங்கள், 24 பிப்ரவரி, 2014

இரசாயன கசிவு:அவதியில் தொழிலாளர்கள்


சுவிசின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கசிவினால் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சுவிசின் பிராட்டெலன் பகுதியில் உள்ள இரசாயன நிறுவனத்தில் கடந்த 21ம் திகதி கார்சினோஜிக் திரவம் கசிந்து கட்டடத்தில் இரசாயனம் சூழந்ததால் அங்கிருந்த நான்கு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு இராணுவ பொலிஸ், தீயணைப்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இவர்கள் 4 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இச்சம்பவத்தினால் அருகே உள்ள பகுதிகளில் உயிர்சேதம் ஏதும் ஆகவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாரின் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.