வியாழன், 6 பிப்ரவரி, 2014

பெயர் மாற்றம் வேண்டாம் ப்ளீஸ்

சுவிசில் ஆண்குழந்தைக்கு பெண்ணின் பெயரும், பெண்குழந்தைக்கு ஆணின் பெயரும் வைக்கப்பட்டு வருவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சுவிஸ் தலைநகர் பெர்னில் பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு விருப்ப பெயரை வைப்பதாக எண்ணி பெயர் மாற்றம் செய்து வருகின்றனர்.
அனால் இப்பெயர் மாற்றத்தால் ஏற்கனவே சிலர் திருநங்கைகளாவும், ஓரினச் சேர்க்கையாளர்களாகவும் மாறியதால் பெர்ன் அதிகாரிகள் இச்செயலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் Huttwil என்ற நகரத்தில் வசிக்கும் அலைன் மற்றும் மிரியாம் பெலெக் தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இக்குழந்தை பிறந்த 15 நிமிடங்களிலேயே தம்பதிகள் அதற்கு ”ஜெஸ்ஸிகோ” பெயர் வைக்க தீர்மானித்தனர்.

இதுகுறித்து பெர்ன் அதிகாரிகள் கூறுகையில், ஜெஸ்ஸிகோ என்பது பெண்ணின் பெயராக இருப்பதால் அதை முதற் பெயராக வைக்க வேண்டாம் என கடிதம் ஒன்றில் தெரிவித்தனர்.
இத்தம்பதிகள் அதிகாரிகளிடம் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் ஜெஸ்ஸிகா என பெயர் வைப்பதாக தீர்மானித்திருந்தனர் என்றும் ஆண் குழந்தை பிறந்ததால் “ஜெஸ்ஸிகோ” என பெயர் வைக்கின்றனர் எனவும் கூறினர்.

எனினும் இதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களின் உரிமை என்று 1994ம் ஆண்டில் வெளிவந்த சட்டத்தை குழந்தையின் தந்தை சூட்டி காட்டியுள்ளார்.
இறுதிவரை அதிகாரிகள் சமரசம் ஆகாததால் குழந்தையின் தந்தை சண்டையிட தொடங்கி கைகலப்பானது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.